திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாம்

Monday, 08 September 2014 08:29 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print
தினமலர்        08.09.2014

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாம்


பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது: டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களிலிருந்து திடக்கழிவுகள் அதிக அளவில் சேகராமாகிறது. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் சேகரமாகும் குப்பைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களே, மக்கும் குப்பைகள்- மக்காத குப்பைகள் என தரம்பிரித்து டவுன் பஞ்சாயத்து வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். வணிக வளாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால், அபராதம் விதிக்கப்படும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். முகாமில், செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் மணிகண்டன், ரிவர்சிட்டி ரோட்டரி தலைவர் உத்திராபதி, சுகதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.