புள்ளம்பாடி பேரூராட்சியில் வீடுவீடாக குப்பை தொட்டிகள் வழங்கல்

Friday, 31 January 2014 11:59 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினகரன்                31.01.2014

புள்ளம்பாடி பேரூராட்சியில் வீடுவீடாக குப்பை தொட்டிகள் வழங்கல்

லால்குடி, : புள்ளம் பாடி பேரூராட்சியில் வீடுவீடாக இலவச குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்தி முன்னிலை வகித்தார். 9, 10, 11, 12ம் வார்டுகளில் இலவச மக்கும் மற்றும் மக்காத குப்பை பக்கெட்டுகளை பேரூராட்சி தலைவர் ஜேக்கப் அருள்ராஜ் வழங்கினார். இளநிலை அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் முருகேசன், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கல்லக்குடி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் மோகன் தலைமை வகித்தார். ஒவ்வொரு வார்டுகளுக்கும் பெரிய குப்பை தொட்டிகளை தலைவர் வாலம்பாள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சின்னயன், இளநிலை அலுவலர் ஜவகர், வார்டு உறுப்பினர்கள், துப்புரவு மேற்பார்வையாளர் சொக்கர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.