பொங்கல் திருநாளில் மதுரையில் 2,358 டன் குப்பைகள் அகற்றம்

Saturday, 18 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி            18.01.2014

பொங்கல் திருநாளில் மதுரையில் 2,358 டன் குப்பைகள் அகற்றம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதியில் 3 நாள்களில் மட்டும் 2,358 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டதாக, ஆணையர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டுகளில் தினமும் காம்பாக்டர், பிளைட்டர், டிராக்டர் உள்ளிட்ட 220 வாகனங்கள் மூலம் 550 டன்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளைக்கல்லிலுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரம் தயாரிக்க எடுத்துச் செல்லப்படுகின்றன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 14 ஆம் தேதி 734 டன்களும், 15 ஆம் தேதி 810 டன்களும், 16 ஆம் தேதி 814 டன்களும் என மொத்தம் 2,358 டன் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்களால் சேகரிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.