தினமணி 31.01.2014
சுகாதாரப் பணிக்கு 2 புதிய சுமை ஆட்டோக்கள்
திருச்செந்தூர் பேரூராட்சி சுகாதாரப்பணிக்கு ரூ. 10 லட்சத்தில் 2 புதிய சுமை ஏற்றும் ஆட்டோக்கள் வாங்கப்பட்டுள்ளன.
பேரூராட்சிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2013-2014-ன் கீழ் வாங்கப்பட்டுள்ள, இப்புதிய வாகனங்களை பேரூராட்சித்தலைவர் மு.சுரேஷ்பாபு, செயல் அலுவலர் கொ.ராஜையாவிடம் வழங்கினார்.
அப்போது சுகாதார ஆய்வாளர் கு.பூவையா, எழுத்தர் மாணிக்கம், ஓட்டுநர்கள் லட்சுமணன், செல்லப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.