அபாய சின்னம் இல்லாத சிகரெட்டைவிற்க கூடாது: மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை

Thursday, 16 July 2009 14:53 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

மாலை மலர் 16.07.2009

அபாய சின்னம் இல்லாத சிகரெட்டைவிற்க கூடாது: மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை

ரோடு, ஜூலை. 15-

சிகரெட், புகையிலை பயன்படுத்துவோரை புற்று நோய் தாக்குகிறது. இந்தியாவில் ஏராளமா னோர் புற்று நோயால் உயிரிழக்கிறார்கள். ஆகவே மத்தியஅரசு நோயை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சிகரெட் மற்றும் பான்பராக் போன்ற புகையிலை பொருட்களின் பாக் கெட்டுகளில் கட்டாயம் அபாய எச்சரிக்கை சின்னம் இடம் பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த சின்னம் இடம் பெறாத பொருட்களை விற்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஈரோடு மாநக ராட்சி சுகாதார நல அலு வலர் சோமசுந்தரம் கூறிய தாவது:-

மத்திய அரசு உத்தரவுப்படி சிகரெட், புகையிலை பொருட்களில் கண்டிப்பாக அபாய எச்சரிக்கை சின்னம் இருக்க வேண்டும். சின்னம் இல்லாத பொருட்கள் விற்பது கண்டுபிடிக்க பட்டால் சம்பந்தப்பட்ட கடைகாரர்களுக்கு அப ராதம் விதிக்கப்படும்.

மேலும் பள்ளி கல்லூரி கள் அமைந்திருக்கும்இடத்தில் சிகரெட் விற்கக்கூடாது. 300 அடி தள்ளி தான் கடை இருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் விற்பதும் தண்டனைக் குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Friday, 17 July 2009 05:54