மலைபோல் குவிதலைத் தடுக்க புதிய முயற்சி 4 கோட்டங்களிலும் உலர் திடக்கழிவு சேகரிப்பு மையங்கள்

Monday, 03 November 2014 07:32 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

 தினமணி    03.11.2014

மலைபோல் குவிதலைத் தடுக்க புதிய முயற்சி 4 கோட்டங்களிலும் உலர் திடக்கழிவு சேகரிப்பு மையங்கள்

திருச்சி மாநகரின் மொத்தக் குப்பையும் அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் மட்டும் மலைபோல் குவிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள இருக்கிறது.

மாநகராட்சியின் ஒவ்வோர் கோட்டத்திலும் ஓர் உலர் திடக்கழிவு மையம் என்ற அடிப்படையில் 4 மையங்களை அமைத்து, அங்கு குப்பைகளைச் சேகரித்து இனம் பிரித்து விற்பனை செய்துவிடவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

65 வார்டுகளைக் கொண்ட திருச்சி மாநகராட்சியின் மொத்தப் பரப்பளவு 167.23 சதுர கிமீ. ஏறத்தாழ 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த மாநகராட்சியின் மொத்த குப்பைக் கழிவுகளும் கடந்த பல்லாண்டுகளாகவே அரியமங்கலம் குப்பைக் கிடங்கிலேயே சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ 2 லட்சம் வீடுகளின் குப்பைகள் ஒரே இடத்தில் சேகரிக்கப்படுவதும், அந்தக் குப்பைகள் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக், இரும்புத் துண்டுகள், கண்ணாடிகளுடன் இருப்பதும் நகரின் சுற்றுச்சூழலுக்கு பெருமை.