தினமணி 04.11.2013
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடு பெற்றோர் 30-க்குள் நிலுவைத் தொகை செலுத்த அறிவுரை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களது நிலுவைத் தொகையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன்படி, நவம்பர் 30-ஆம் தேதி வரை ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த ஏதுவாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவின் மூலம் மனைகள், தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள் இச்சலுகையைப் பயன்படுத்தி நிலுவைத் தொகையை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி கிரயப் பத்திரம் பெற்று பயனடையலாம்.
இத்தகவலை கோவை வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.