அடுக்குமாடி கட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Friday, 20 September 2013 08:59 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினபூமி                20.09.2013

அடுக்குமாடி கட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Mini(C)_100.jpg

சென்னை, செப்.20 - சென்னையில் கட்டப்பட்டுவரும் 12 ஆயிரம் அடுக்குமாடி கட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளை அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவித்தினார்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.வைத்திலிங்கம்  தலைமையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியக் கூட்ட அறையில் வாரியத்தின் பணிகள் குறித்து  வாரியத் தலைவர் கு.தங்கமுத்து, தங்ககலிய பெருமாள், அரசு செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை,  மேலாண்மை இயக்குநர் ஏ.சந்திரசேகரன்,  தலைமைப் பொறியாளர் சு. ஜெயபால், வாரிய செயலர் சு.பரமசிவம் மற்றும்  உயர் அதிகாரிகளுடனும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளுடனும் ஆய்வு செய்தார்கள். கீழே கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

மேலும், குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை  வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் மற்றும் மின் இணைப்பு போன்றவற்றின் பணிகள் குறித்து இஙரநநஆ  ேபசஉஆ அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிந்திட அறிவுறுத்தினார். 

இத்திட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு சாலை வசதிகளை விரைந்து முடிந்திட அறிவுறுத்தினார்.