பிரதிபா பாட்டீல் பேச்சு வறுமையை ஒழிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு

Monday, 15 November 2010 07:34 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினகரன்               15.11.2010

பிரதிபா பாட்டீல் பேச்சு வறுமையை ஒழிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு

புதுடெல்லி, நவ.15: உலக அளவில் நிலவும் வறுமையை ஒழிப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தாய்மை, குழந்தை பிறப்பு மற்றும் சுகாதாரத்துக்கான 2010ம் ஆண்டின் சர்வதேச கூட்டமைப்பு மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரதிபா பேசியதாவது:

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு சில குறைபாடுகள் ஏற்படுவதால் குழந்தை இறப்பு விகிதம் உலக அளவில் நம்நாட்டில் அதிகமாகவே இருக்கிறது. இதை போக்க தாய்மை நலம், குழந்தை பிறப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் தேவை. அதற்கான முன்சிகிச்சை முறை அனைத்தையும் சரியான முறையில் கையாள வேண்டும். நாட்டில் நிலவும் வறுமையை ஒழிப்பது என்பது இன்றை சூழலில் மிகவும் முக்கியம். அந்த நோக்கில் பார்க்கையில் இந்தியா உலக அளவில் நிலவும் வறுமைமை குறைப்பதற்கு தகுந்த அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.

இன்றைய வளர்ச்சிக்கான குறிக்கோளில் பொருளாதார மீட்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகள், அதிலிருந்து மீள வேண்டும். சிறந்த கொள்கைகள் மூலம் வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்திய எட்டி வருவதால், நடப்பாண்டின் இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மகப்பேறுவின் போது, தாய் மற்றும் குழந்தை இறப்பை குறைக்க அரசு சார்பில் தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் 250 பின்தங்கிய மாவட்டங்களில் போதிய சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இதை போக்க சிறப்பு கவனம் செலுத்தி அனைத்து பகுதி மக்களும் மருத்துவ வசதி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

இந்தியாவில் முன்சிகிச்சை காரணமாக தற்போது போலியோ, அம்மை நோய் தாக்குதல் குறைந்துள்ளதாக உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 15 November 2010 10:15