ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Tuesday, 18 February 2014 07:35 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினத்தந்தி              18.02.2014

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். நேற்று காரைவாய்க்கால் மண்டபம்வீதி, கச்சேரி வீதி, மாரிமுத்து வீதிகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

மண்டல உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இளம் பொறியாளர்கள் பிரேம்குமார், முருகானந்தம் மற்றும் சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்றனர். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த சுவர்கள், சிலாப்புகள் மற்றும் கூரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர்.

சுமார் 50 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈரோடு டவுன் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

இதுபோல் மாநகர் பகுதி முழுவதும் மாநகராட்சி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.