வேலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Thursday, 07 November 2013 09:20 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி            07.11.2013

வேலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் ஆபிசர்ஸ் லைனில் மாநகராட்சிக்கு சொந்தமான சாரதி மாளிகை முன்புறம் ஆக்கிரமித்திருந்த கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

சாரதி மாளிகை வளாகத்தில் 70-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றுக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைபடும் அளவுக்கு சாலையோர கடைகள் 30-க்கும் மேற்பட்டவை ஆக்கிரமித்திருந்தன.

 இது தொடர்பாக வணிகர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தவண்ணம் இருந்தனர். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் புதன்கிழமை காலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அக்கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்புறப்படுத்தப்பட்ட தளவாடங்கள் அனைத்தும் லாரியில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.