அருள்தாஸ்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Wednesday, 07 August 2013 07:20 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி             07.08.2013

அருள்தாஸ்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை அருள்தாஸ்புரம் அய்யனார் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

 அருள்தாஸ்புரம் அய்யனார் கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

 இதனால் 8 ஆவது வார்டில் இருந்து பாதாளச் சாக்கடை இணைப்புக் குழாய்கள், கழிவுநீரேற்று நிலையத்துடன் இணைப்பு கொடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.

 அதையடுத்து, அப் பகுதியை ஆய்வு மேற்கொண்ட மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தினார்.

 இதன்படி,   ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இரு வீடுகளை இடிப்பதற்கு  நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்ததால், அவ்வீடுகள் இடிக்கப்படவில்லை.