வாழ்க்கையில் முன்னேற்றம் காண பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் நாகை கலெக்டர் முனுசாமி பேச்சு

Thursday, 04 April 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print
தினத்தந்தி        04.04.2013

வாழ்க்கையில் முன்னேற்றம் காண பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் நாகை கலெக்டர் முனுசாமி பேச்சு


வாழ்க்கையில் முன்னேற் றம் காண பெண்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் முனுசாமி கூறினார்.

பெண்கள் தின விழா


நாகையில் சினேகா தொண்டு நிறுவனம் சார்பில் உலக பெண்கள் தின விழா நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:பொதுவாக பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்ப வர்கள் என்ற நிலை மாறி பல் வேறு துறைகளில் பொறுப் பான பல துறைகளில் முன் னேறி வருகின்றனர். வாழ்க்கை யில் நல்ல முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கல்வியில் பெண்கள் நல்ல முறையில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது மாறி வரும் சூழ்நிலையில் மாணவர் களைவிட மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கின்றனர். நல்ல புத்திசாலியாகவும் வளர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் சுய உதவிக் குழுக்கள் வந்த பிறகு பெண்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள னர். கணவன் பொருளீட்ட முடியாத ஒரு சூழ்நிலையில் சுயமாக தொழில் செய்து சம்பாதித்து குடும்பத்தை காப் பாற்றும் அளவிற்கு பெண்கள் முன்னேறி உள்ளனர். சுய உதவிக் குழுக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் வங்கி களும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் ஒரு கோடி வரை கடனுதவி பெற்ற சுய உதவிக் குழுக்களும் உள்ளன.

அரசு உதவி

சுய உதவிக் குழுக்களை பொறுத்தவரை வெறும் வட்டித் தொழில் மட்டும் செய்யாமல் ஒரு தொழிலை தொடங்கி நடத்தினால் நல்ல லாபம் பெறலாம். அரசு உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

முதல்அமைச்சர் பெண் களை மையமாக வைத்துதான் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். விலை யில்லா கறவைப் பசு, விலை யில்லா வெள்ளாடுகள் வழங் கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பெண்கள் வாழ் வாதாரம் முன்னேற்றம் அடைவதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். விலையில்லா ஆடு, மாடுகளை முறையாக பராமரித்தால் ரூ.2 லட்சம் வரை பொருள் சேர்க்கலாம்.

திறமை

பொதுவாக பெண்களிடம் தான் பொறுப்புணர்வு அதி கம் உள்ளது. சுய தொழில் செய்து சம்பாதிக்கவும், பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும், குழந்தைகளை படிக்க வைத்து குடும்பத்தை கட்டுப்பாடுடன் நிர்வகிக்கவும் பெண்கள் திறமை படைத்த வர்கள். நாகை மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் பெண்கள் கல்வி யில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் முனுசாமி கூறினார்.

உதவித்தொகை


விழாவில் ஐ.டி.ஐ.யில் படிக் கும் உறுப்பினர்களின் குழந் தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக தலா ரூ.500 வீதம் 458 பேருக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் முனுசாமி வழங்கினார்.

விழாவில் சினேகா தொண்டு நிறுவன முதன்மை ஒருங்கிணைப்பாளர் ராசேந் திரன், தலைவர் ரமணிமேத்யூ, மாநில செயற் குழு உறுப்பினர் மதுரை பவளம், சீர்காழி தொகுதி கள ஒருங்கிணைப் பாளர் தமயந்தி, பாலியல் நீதித்துறை தலைவர் வனஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.