தினகரன் 10.12.2010
மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்
மதுரை
, டிச.10: மதுரை மாநகராட்சி 5 பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தனியார் அறக்கட்டளை மூலம் ஒரு ரூபாய் நாப்கின் இயந்திரம் விரைவில் வைக்கப்படவுள்ளதாக ஆணையாளர் செபாஸ்டின் கூறினார்.அவர் தெரிவித்ததாவது
: மதுரையில், ஈவே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரி பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகளுக்கான நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட உள்ளது.இயந்திரத்தில் மாணவிகள் ஒரு ரூபாய் செலுத்தி நாப்கினை பெற்றுக்கொள்ளலாம்
. தமிழகத்திலேயே முதல்கட்டமாக மதுரை மாநகராட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை பராமரிப்பு செய்ய ஊனமுற்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.