தினகரன் 31.12.2013
தாம்பரத்தில் ரூ21.56 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
தாம்பரம், : தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தற்போது நகராட்சிக்காக தாம்பரம் கிழக்கு மேற்கை இணைத்து பாதாள சாக்கடை திட்டப்பணி ரூ. 161 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணி சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
39வார்டுகளில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரித்து அடையாறு ஆற்றில் விடும் வகையில் தாம்பரம் கன்னடபாளையம் மண்ணூரான் குளம் பகுதியில் ரூ.21.56 கோடியில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இங்கு 300 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைப்புகள் நடந்து வருகிறது.
தற்போது 60 சதவீதம் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.