தினமலர் 02.04.2013
வாகன காப்பக வசூல் நகராட்சி ஏற்பு
சிவகாசி:சிவகாசி பஸ்ஸ்டாண்டில் வாகன காப்பாக வசூலை நகராட்சி ஏற்றது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன காப்பகத்தை, தனியார் கான்ட்ராக்ட் எடுத்து பணம் வசூலித்தனர். இவர்கள் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட, இரு மடங்கு உயர்த்தி பணம் வசூலித்தனர்.
வாகன காப்பக வசூல் நகராட்சி ஏற்பு
சிவகாசி:சிவகாசி பஸ்ஸ்டாண்டில் வாகன காப்பாக வசூலை நகராட்சி ஏற்றது. இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
சிவகாசி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன காப்பகத்தை, தனியார் கான்ட்ராக்ட் எடுத்து பணம் வசூலித்தனர். இவர்கள் நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட, இரு மடங்கு உயர்த்தி பணம் வசூலித்தனர்.
சைக்கிளுக்கு 2க்கு பதில் 3ரூபாய், டூவீலர், பைக்கிற்கு 3க்கு பதில் 5ரூபாய் வசூலித்தனர். 24 மணிநேர வாடகையை, 12 மணிநேரம் என நிர்ணயித்து கெடுபிடியாக வசூலித்தனர். வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
10 கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் விரைவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே விரிவாகத்திற்கு பெறப்பட்ட நிலத்தையும் சேர்த்து, 2 ஏக்கர் பரப்பில் நவீன பஸ் ஸ்டாணட் அமைக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து சைக்கிள் ஸ்டாண்ட் கான்ட்ராக்ட்டை ரத்து செய்து, நகராட்சியே நடத்த முடிவு செய்தது.
ஏப்ரல் முதல் நகராட்சியே வசூலித்து வருகிறது. தினமும் வாகன காப்பகத்தில் இருந்து 800 ரூபாய் வரை வசூலாகிறது.
நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் நகராட்சி வசூல் செய்வதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையும் நகராட்சி ஏற்று நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோருகின்றனர்.