நகர்ப்புறம், பேரூராட்சி மின்நுகர்வோர்களுக்காக தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம்

Friday, 17 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி            17.01.2014

நகர்ப்புறம், பேரூராட்சி மின்நுகர்வோர்களுக்காக தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புறம், பேரூராட்சிப் பகுதிகளில் தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மேற்பார்வைப் பொறியாளர் ஏ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி நகர்ப்புறக் கோட்டம், சமாதானபுரத்தில் மின்தடை குறை தீர்க்கும் மையம் இயங்கி வருகிறது. இம் மையத்தில் மின்தடை சம்பந்தமாக ஏற்படும் குறைகளை 0462-2562900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரியப்படுத்தலாம். மின்தடை சம்பந்தப்பட்ட குறைகளைப் பதிவு செய்யும்போது மின் இணைப்பு எண்ணையும் தெரியப்படுத்துவது அவசியம். இதற்காக மின்வாரிய அலுவலகத்தை நேரில் அணுகத் தேவையில்லை. பதிவு செய்யப்பட்ட மின்தடை தொடர்பான குறைகள் உடனடியாக அந்தந்த பகுதி கம்பியாளரிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

திருநெல்வேலி நகர்ப்புறப் பகுதியில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு, பெருமாள்புரம், மகாராஜநகர், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், தச்சநல்லூர், பேட்டை, பழையபேட்டை, சமாதானபுரம், வி.எம். சத்திரம், சாந்திநகர், ரெட்டியார்பட்டி, வண்ணார்பேட்டை பகுதி மின்நுகர்வோர் இந்த மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

இதுதவிர பேரூராட்சிப் பகுதிகளில் ஆலங்குளம், தாழையூத்து, நான்குனேரி, கீழப்பாவூர், திருவேங்கடம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், முக்கூடல், வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, ஏர்வாடி, களக்காடு, திருக்குறுங்குடி, சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், சுந்தரபாண்டியபுரம், வடகரை ஆகிய பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த மின்நுகர்வோரும் இந்த குறைதீர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

பிற பகுதியினர், அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.