மாநகராட்சி தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்

Friday, 29 November 2013 08:39 administrator நாளிதழ்௧ள் - மின் ஆளுமை
Print

தினமணி             29.11.2013

மாநகராட்சி தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம்

தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களுக்குமான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அமலில் உள்ளது.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி உரிய காலத்தில் நிலுவையின்றி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணங்களைச் செலுத்தலாம்.

நகரில் உள்ள பல்வேறு கட்டடங்களின் உரிமையாளர்கள் சுயமதிப்பீட்டுப் படிவம் சமர்ப்பிக்கப்படாமலும், கட்டட உபயோகத்திற்கு ஏற்றவாறு சொத்துவரி நிர்ணயம் செய்யாமலும் இருந்து வருகின்றனர்.

கள ஆய்வில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் உபயோக மாற்றப்பட்டுள்ள கட்டடங்கள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக குடிநீர் இணைப்புத் துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையைத் தவிர்க்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.