தினகரன் 20.11.2013
மாநகராட்சியில் அறிமுகம் ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி
கோவை, : கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரியை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் தொழில்வரி செலுத்துவோர் 4,299 பேர் உள்ளனர். இவர்கள், கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 82 லட்சம் தொழில் வரி செலுத்தியுள்ளனர். இவர்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று தொழில் வரி செலுத்துவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி துவக்க விழா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் லதா தலைமை தாங்கினார். மேயர் செ.ம.வேலுசாமி ஆன்லைன் மூலம் தொழில் வரி செலுத்தும் வசதி மற்றும் அபாயகரமான கடைகள் தொழில் உரிமம் தொகை (டி அண்ட் ஓ) செலுத்தும் வசதியை துவக்கிவைத்தார். இதற்காக, ஷ்ஷ்ஷ்.நீநீனீநீ.ரீஷீஸ்.வீஸீ என்னும் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவுசெய்து, தொழில் வரி மற்றும் உரிமம் கட்டணம் செலுத்தலாம். பயனாளர்கள் தங்களது முந்தைய ஆண்டின் செலுத்தாத நிலுவை தொகையையும் இதன்மூலம் செலுத்த முடியும்.
நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சிவராசு, மண்டல தலைவர் ராஜ்குமார், உதவி ஆணையாளர்கள் அமுல்ராஜ், சுந்தரராஜ், செந்தில்குமார், பிரபாகரன், நகர் நல அலுவலர் அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.