இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி முன்னாள் மாணவருக்குப் பாராட்டு விழா

Saturday, 25 July 2009 10:45 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி 25.07.2009

இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி முன்னாள் மாணவருக்குப் பாராட்டு விழா

மதுரை, ஜூலை 24: மதுரை மாநகராட்சிப் பள்ளியில் பயின்று இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள வீரபாண்டிக்கு மேயர் ஜி.தேன்மொழி தலைமையில், ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மாநகராட்சி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் மேயர் பேசுகையில், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரபாண்டியால் மதுரை மாநகராட்சியே பெருமை அடைகிறது என்றார்.

ஆணையர் பேசுகையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துவருகிறது. மதுரை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற வீரபாண்டி மாநகராட்சிக்கு பெருமை சேர்த்ததுபோல், மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மாநிலத்தில் முதலிடம்பெற்று பெருமை சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரபாண்டி ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் மண்டலத் தலைவர்கள், கல்விக்குழுத் தலைவர், கவுன்சிலர்கள், தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.