மன்னார்குடி நகரில் ரூ5 கோடியில் புதிய சாலைகள் நகர்மன்ற தலைவர் தகவல்

Thursday, 30 January 2014 11:27 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினகரன்                30.01.2014 

மன்னார்குடி நகரில் ரூ5 கோடியில் புதிய சாலைகள் நகர்மன்ற தலைவர் தகவல்

மன்னார்குடி, : மன்னார்குடி நகரில் ரூ.5 கோடி யில் புதிய சாலைகள் அமைக்கப்பட இருப்பதாக நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன் தெரிவித்தார்.

மன்னார்குடி நகராட்சி சார்பில் பொது மக்கள் குறை கேட்கும் முகாம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன் தலைமை வகித்தார். ஆணை யர் (பொ) மனோகரன், துணை தலைவர் வரலெட் சுமி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சியின் அனைத்து பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் சுமார் 120 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றில் பெரும் பாலும் தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், தெரு விளக்குகள், சாலை வசதி, மற்றும் குப் பைத் தொட் டிகள் வைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத் தியும் மக்கள் மனு அளித்தனர்.  அதேபோல் பெயர் மாற்றம் பிறப்பு, இறப்பு சான்றிதழ், மருத்துவ உதவிகேட்டும் சிலர் மனு அளித்திருந்தனர். அந்த மனுக்கள் மீது பொது மக்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து  நகரர்மன்ற தலை வரும், அலுவலர்களும் பதிலளித்தனர்.இதுபற்றி நகர்மன்றத்தலைவர் சுதா அன்புச்செல் வன் கூறியது:

பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்களில் பிறப்பு, இறப்பு மற்றும் பெயர் மாற்றம் போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கானப்பட் டது. அதுபோல் தங்களது பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு தொடர்பான பிரச்னையையும் பொது மக்கள் முன்வைத்தனர். அவற்றை தயார் நிலையில் இருந்த  துப்புரவு பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அந்த குறை களை சரி செய்தனர். மே லும் ஆக்கிரமிப்புகள் தொடர்பான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள் ளோம். ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  நகரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்னுரிமை அளிக்கப்படும். 

மன்னார்குடி நகரில் 24 வார்டுகளில் ரூ. 5 கோடிக்கு புதிய சாலைகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு விரை வில் பணிகள் தொடங்கவுள்ளன. மீத முள்ள 7 வார்டுகளில் இந்த பணிகள் நடைபெற்று முடிவதற்குள் நிதியை கேட்டுப்பெற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு நகராட்சி தலைவர் கூறினார்.