ரூ.1.14 கோடியில் சாலை மேம்பாடு

Saturday, 25 January 2014 07:30 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி             25.01.2014 

ரூ.1.14 கோடியில் சாலை மேம்பாடு

நாமக்கல் நகரில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மேம்படுத்தும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தொடக்கிவைத்தார்.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரங்கர் சன்னதி முதல் சேந்தமங்கலம் சாலை மின் மயானம் வரை ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் தார்ச் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகளை நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வியாழக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தார். மேலும், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.காந்திமுருகேசன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் காளியப்பன், நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், நகர்மன்றத் துணைத் தலைவர் கே.சேகர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலர் லியாகத்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.