மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சத்தில் தார் சாலைப் பணி

Saturday, 04 January 2014 04:44 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி                 03.01.2014

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சத்தில் தார் சாலைப் பணி

மொடக்குறிச்சியில் ரூ.92 லட்சம் மதிப்பிலான தார் சாலைப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

மொடக்குறிச்சி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் அவல்பூந்துறை சாலை முதல் நடுப்பாளையம், புதுக்காலனி, தெற்குமேடு, ஊஞ்சப்பாளையம் வழியாக முத்தூர் மெயின் ரோடு வரை நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் மற்றும் பொது நிதி ரூ.12 லட்சம் ஆக மொத்தம் ரூ.92 லட்சம் மதிப்பிலான 2.4 கி.மீ.க்கு புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தலைவர் தங்கவிலாஸ் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மணி (எ) சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் துரைசாமி வரவேற்றார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என். கிட்டுசாமி கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் குருமூர்த்தி, ஈரோடு ஆவின் இயக்குநர் அசோக், பேரூராட்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவி, அதிமுக பேரூர் செயலாளர் மயில்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.தேவா நன்றி கூறினார்.