ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

Tuesday, 31 December 2013 11:27 administrator நாளிதழ்௧ள் - சாலை௧ள் மேம்பாடு
Print

தினமணி              31.12.2013

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

ஆத்தூர் பேருந்து நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜைநடைபெற்றது.

ஆத்தூர் பேருந்து நிலையம் கடந்த 2001- ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்கு போடப்பட்டிருந்த தார்ச் சாலை பழுதடைந்து பேருந்து நிலையம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கான்கீரிட் சாலை அமைக்க திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

இதில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். மாதேஷ்வரன், நகர்மன்றத் தலைவர் பி.உமாராணி பிச்சைக்கண்ணன், துணைத் தலைவர் அ.மோகன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் டி.எம். ராமலிங்கம், முஸ்தபா, குணசேகர், நடராஜ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.