தினமணி 18.08.2012
தில்லியில் வாகன நிறுத்த கட்டணம் உயரக்கூடும்
புது தில்லி, ஆக. 17: தில்லியில் வாகன நிறுத்தக் கட்டணம் விரைவில் உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது. தில்லி மாநகராட்சிகள், புது தில்லி முனிசிபல் கவுன்சில், மாசுக் கட்டுபாட்டு ஆணையம், தில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகிவற்றின் அதிகாரிகள் துணை நிலை ஆ ளுநரை வியாழக்கிழமை சந்தித்து தில்லியில் வாகன நிறுத்தக் கொள்கை குறித்து விவாதித்தனர்.அதில் தில்லி முழுதும் வாகன நிறுத்த மையங்களில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறின . பரிந்துரை இறுதி செய்யப்பட்டு தில்லி பிரதேச அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வாகன நிறுத்த கட்டண உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தலைநகரில் தினசரி சராசரியாக 1,200 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.