மறுபடியும்...!

Saturday, 15 August 2009 08:57 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமணி 15.08.2009

மறுபடியும்...!

ஒசூர், ஆக.14: ஒசூர் ஆட்டு இறைச்சிக் கூடத்தை ஒசூர் எம்எல்ஏ கே.கோபிநாத் மீண்டும் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

ஒசூர் நகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிதியில் ஆட்டு இறைச்சிக் கூடம் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கட்டப்பட்டது. இதை கடந்த 18.06.2009 தேதியில் ஒசூர் நகரமன்றத் தலைவர் எஸ்..சத்யா, நகராட்சி ஆணையாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த ஆட்டு இறைச்சிக் கூடத்தை வெள்ளிக்கிழமை மீண்டும் ரிப்பன் வெட்டி எம்எல்ஏ கே.கோபிநாத் திறந்து வைத்தார்.

இதே போல ஒசூர் நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு பாரதிதாசன் நகரில் சாலை அமைக்க 05.08.2008-ல் பூமி பூஜை நடத்தப்பட்டது. இதே சாலைக்கு 10.01.2009-ல் பூமி பூஜை நடத்தினார் எம்எல்ஏ.

ஒசூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 4-வது வார்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7.01.2009-ல் ஒப்படைத்தது ஒசூர் நகராட்சி. இந்த வளாகத்தை 10.01.2009-ல் எம்எல்ஏ கோ.கோபிநாத் மீண்டும் திறந்து வைத்தார்.

ஒசூர் நகராட்சி நிதியில் இருந்து ஒதுக்கப்படும் இத் திட்டங்களுக்கு எதற்கு இரண்டு விழாக்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.