மாநகராட்சி கணக்கு குழுவின் முதல் கூட்டம்

Saturday, 18 August 2012 09:08 administrator நாளிதழ்௧ள் - ௧ணக்கு / தணிக்கை
Print

தினமணி            18.08.2012

மாநகராட்சி கணக்கு குழுவின் முதல் கூட்டம்

திருப்பூர், ஆக. 17: திருப்பூர் மாநகராட்சி கணக்குக் குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் சி.பி.வசந்தாமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள 8 கவுன்சிலர்கள், 4-வது மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி அதிகாரிகள், கணக்குப் பரிவு உதவி ஆணையர் சந்தானம், கணக்கு அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரையிலான 3 மாதங்களுக்கான மாநகராட்சியின் வரவு மற்றும் செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மாநகராட்சிக்கு வரியினங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் நிதி, குடிநீர் வருவாய் நிதி, கல்வி நிதி மற்றும் மூலதன நிதிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, செலவு விவரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.