தினமணி 21.07.2009
வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்
ஆம்பூர், ஜூலை 20: பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் கடை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்த ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி கடைகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ச. குமரிமன்னன் மற்றும் நகராட்சி பணியாளர்களால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆம்பூர் நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் பிளாட்பாரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகளும் அகற்றப்பட்டன.