வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

Tuesday, 21 July 2009 08:20 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி 21.07.2009

வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

ஆம்பூர், ஜூலை 20: பிரதி மாதம் 5-ம் தேதிக்குள் கடை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்த ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி கடைகள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆம்பூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) . குமரிமன்னன் மற்றும் நகராட்சி பணியாளர்களால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஆம்பூர் நகராட்சி பேருந்து நிலையத்திற்குள் பிளாட்பாரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகளும் அகற்றப்பட்டன.