தினமணி 12.07.2016
2016-17-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், வரி, கட்டணமாக ரூ.92.77 கோடியை சென்னை குடிநீர் வாரியம் வசூலித்துள்ளது.
நிகழ் நிதியாண்டின் தொடக்கம் முதலே எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டை காட்டிலும் (ரூ.75.07 கோடி) 24 சதவீதம் அதிகமாகும்.
மேல்வரி, இணைப்பை துண்டித்தல், ஜப்தி முதலிய நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில் வரி, கட்டண நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.