பிப். 28க்குள் வரிகளை செலுத்த காரைக்குடி நகராட்சி வேண்டுகோள்

Thursday, 23 January 2014 11:54 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி             22.01.2014 

பிப். 28க்குள் வரிகளை செலுத்த காரைக்குடி நகராட்சி வேண்டுகோள்

காரைக்குடி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குடிநீர் இணைப்பிற்கு செலுத்த வேண்டிய கூடுதல் வைப்புத்தொகை ஆகிய அனைத்துவித வரிகளையும் வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)பொ. மாரியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்நகராட்சியில் அத்தியாவசிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

 அதற்காக வரிகளை செலுத்த பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரி செலுத்தாத நபர்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போர் பட்டியலை முகவரியுடன் பஸ் நிலையத்தில் பிளக்ஸ் பெயர் பலகை வைக்கவும் நாளிதழில் பிரசுரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 வரி செலுத்தாதோரின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்புச்செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும். பணம் செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களிலும் கல்லுக்கட்டி குடிநீர் தேக்கத்தொட்டி வசூல் மையமும், நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வசூல் மையமும் இயங்கும் என்றார்.