அன்னூர் பேரூராட்சியில் வரி செலுத்த வேண்டுகோள்

Thursday, 16 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி            16.01.2014

அன்னூர் பேரூராட்சியில்  வரி செலுத்த வேண்டுகோள்

அன்னூர் நகராட்சியில் வரிசெலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சித் தலைவர் ராணி, செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சில பகுதிகளில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளன. அதனால் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரிகளைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், நகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.