குடிநீர் வரி செலுத்த வரும் 31 கடைசி நாள்

Thursday, 20 August 2009 06:42 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி 20.08.2009

குடிநீர் வரி செலுத்த வரும் 31 கடைசி நாள்

சென்னை, ஆக. 19: குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

2009-2010 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும். தாமதமாகச் செலுத்தினால் மேல்வரி விதிக்கப்படும். சென்னை குடிநீர் வாரியத்தின் வசூல் மையங்கள் சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாள்களிலும் செயல்படும். வரி, கட்டணங்களைச் செலுத்தக் கூடிய இவ்வசதியினை நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் மீது ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் அவரவர்களுக்குரிய சென்னை குடிநீர் வாரிய அலுவலகங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.