2 பள்ளியில் சோலார் சிஸ்டம்

Wednesday, 29 January 2014 10:20 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி           28.01.2014 

2 பள்ளியில் சோலார் சிஸ்டம்

ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை, காரை நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ரூ.6.30 லட்சத்தில் 2 கிலோ வோல்ட் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் சிஸ்டத்தை நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

நகர்மன்றத் துணைத் தலைவர் ஜே.பி.சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கே.பி.சந்தோஷம், ஆணையர் (பொறுப்பு) ச.மணி, நகராட்சி பணி ஆய்வாளர் தமிழரசன், பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.