நேரு நகர புனரமைப்பு திட்ட பணிகள் துவக்கம்

Tuesday, 08 September 2009 06:59 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி 08.09.2009

நேரு நகர புனரமைப்பு திட்ட பணிகள் துவக்கம்

கோவை, செப். 7: கோவை ஒண்டிப்புதூரில் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் ரூ.8.50 கோடி செலவில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரில் நடந்த விழாவில் பங்கேற்றவர்களை கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி வரவேற்றார். துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

பணிகளை துவக்கி வைத்து, விழாவிற்கு ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் கே.சுகுமார் நன்றி கூறினார்.