தெருவிளக்குகள் எரியவில்லையா? புகார் தெரிவிக்கலாம்

Thursday, 13 November 2014 07:11 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தினமணி       13.11.2014

தெருவிளக்குகள் எரியவில்லையா? புகார் தெரிவிக்கலாம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை என்றால், குறிப்பிட்ட மொபைல் எண்களில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையாளர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வார்டு பகுதிகளில் எரியாத தெருவிளக்குகள் பற்றிய புகார்கள், மைய அலுவலகத்திலுள்ள தகவல் மையத்திற்கு அதிக அளவில் வருகின்றன. இந்த புகார்களை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தெரிவித்து, சரிசெய்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டு வந்தது.இதை தவிர்க்கவும், எரியாத தெருவிளக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய வைப்பதற்கும் மண்டல வாரியாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மண்டலம்-1 (மேற்கு) பகுதியிலுள்ள 1-வது வார்டு முதல் 23-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82691 என்ற எண்ணிலும், மண்டலம்-2 (வடக்கு) பகுதியிலுள்ள 24-வது வார்டு முதல் 49-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82692 என்ற எண்ணிலும், மண்டலம்-3 (கிழக்கு) 50வது வார்டு முதல் 74-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82693, மண்டலம்-4 (தெற்கு) பகுதியிலுள்ள 75-வது வார்டு முதல் 100-வது வார்டு வரையிலான பகுதிக்கு 91504 82694 ஆகிய கைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இந்த கைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பழுதுகள் சரிசெய்யப்படும், எரியாத தெருவிளக்குகள் உடனடியாக எரியவைக்கப்படும், என தெரிவித்துள்ளார்.