தினமணி 20.08.2010
தி.மலை நகராட்சி பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்
திருவண்ணாமலை, ஆக. 19: திருவண்ணாமலை நகராட்சி பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சமையல் கலை, ஏ.சி. மெக்கானிக், கணினி பயிற்சி என 4 மாதங்கள் 88 பயனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ கணேஷ் கேட்டரிங் கல்லூரியில் சமையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பயனாளிகள் சமைத்த உணவுப் பொருள்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆணையர் ஆர்.சேகர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலக பிரதிநிதி செல்வராஜ் ஆகியோர் கணகாட்சியை பார்வையிட்டு உணவுப் பொருள்களை தயாரித்தவர்களை பாராட்டினர். மேலாளர் கணேசன், நேர்முக உதவியாளர் ஜெ.பழனி, சமுதாய அமைப்பாளர்கள் சி.செல்வராணி, பி.இந்திரா, கல்லூரி இயக்குநர்கள் திருநாவுக்கரசு, குணசேகரன் பங்கேற்றனர்.