Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு

Print PDF

தினமலர்       22.11.2017

பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க வழக்கு

மதுரை, ''மதுரையில் பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க தாக்கலான வழக்கில், மாநகராட்சி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு ஜெயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் தாக்கல் செய்த மனு:

சொத்துவரி செலுத்தக்கோரி எங்கள் பள்ளிக்கு மாநகராட்சி கமிஷனர் 2016 ல் நோட்டீஸ் அனுப்பினார். நாங்கள் கல்வி சார்ந்த அறப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கட்டடத்தை கல்வி கற்பிக்கும் நோக்கத்திற்கு  பயன்படுத்துகிறோம். சொத்துவரி செலுத்துவதிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விலக்களிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கமிஷனரின் நோட்டீைச ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் 63 தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு:

மதுரை மாநகராட்சி சட்டப்படி சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, மாநகராட்சிநிர்வாகத்திடம் மனுதாரர்கள் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை சட்டத்திற்குப்பட்டுகமிஷனர் பரிசீலிக்க வேண்டும். தங்கள் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் ஆவணங்களை மனுதாரர்கள் தாக்கல்செய்ய வேண்டும். மனுதாரர்கள் விளக்கமளிக்க போதிய வாய்ப்பளித்து, அது தொடர்பான நடைமுறைகளை 6வாரங்களில் மாநகராட்சி நிர்வாகம் முடிக்க வேண்டும். கோரிக்கையை மாநகராட்சி கவுன்சில்அனுமதிக்கும்பட்சத்தில், மனுதாரர்கள் சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கிற்கான உரிமையை பெறுவர்.

இல்லாதபட்சத்தில் சட்டத்திற்குட்பட்டு சொத்து வரியை வசூலிக்க கமிஷனர் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது, என்றார்.

Last Updated on Wednesday, 29 November 2017 07:22
 

48.74 கி.மீ., ரோடுகளை சீரமைக்க ஒதுக்கீடு ரூ. 21.77 கோடி மாநகராட்சியின் 41 வார்டுகள் புறக்கணிப்பு

Print PDF

தினமலர்    18.11.2017

48.74 கி.மீ., ரோடுகளை சீரமைக்க ஒதுக்கீடு ரூ. 21.77 கோடி மாநகராட்சியின் 41 வார்டுகள் புறக்கணிப்பு  

மதுரை, மதுரை நகரில் பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்த நிலையில் 48.74 கி.மீ., ரோடுகளை மட்டும் சீரமைக்க, நகர்புற சாலைகள்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 21.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நகரில் 1,500 கி.மீ.,க்கு சாலைகளை மாநகராட்சி பராமரிக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் 90 கி.மீ.,க்கு ரோடுகள் அவசர கதியாக சீரமைக்கப்பட்டன.பெரும்பாலான ரோடுகள் அனைத்தும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.இன்று குண்டும்,குழியுமாக உள்ளன. தொடர் மழையால் ரோடுகளில் மெகா பள்ளங்கள் உருவாகின.ரோடு சீரமைப்புக்குஉள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 'கட்டிங்' கொடுக்கும் நடைமுறை இருந்ததால் ரோடு பராமரிப்புக்கான நிதி 20முதல் 35 சதவீதம் வரைவீணடிக்கப்பட்டது.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 21 கோடி ரூபாயில் தரமான தார் மற்றும் பேவர்பிளாக் ரோடுகள்அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 5 - 8, 10 - 22, 27, 33, 37- 42, 44 - 47, 75 -77, 80, 81, 83 - 85, 87 - 89, 90-93, 100 ஆகிய வார்டுகளில்குறிப்பிட்ட ரோடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ன.இதன்படி 59 வார்டுகளில் இப்பணி நடைபெறும். மீதமுள்ள41 வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகரில் மிகவும் சேதமடைந்துள்ள ரோடுகள்அனைத்தும் தற்போதுமாநகராட்சியின் பொது நிதியில்'ஒட்டுவேலை' பார்க்கப்பட்டு வருகிறது.நகர்புற சாலைகள்மேம்பாட்டு திட்டத்தில் சீரமைக்கப்பட உள்ள ரோடுகள் மிகவும் பாழ் பட்டுள்ளன.அதனால் இவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளன. இந்த ரோடுகளுக்கான டெண்டர் டிச., 12 ல் நடைபெற உள்ளது. மழைக்காலம் முடிந்த பின் ஜன., முதல்ரோடுகள் அமைக்கப்படும்.மற்ற ரோடுகளை மேம்படுத்துவதற்கு மேலும்சில திட்டங்களில்நிதி ஒதுக்கீடுபெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,என்றனர்.
 

கோயம்பேடு மார்க்கெட்டில் 674 கடைகளில் நிலுவை: சொத்து வரி ரூ.1 கோடியே 77 லட்சம் வசூல்

Print PDF

தி  இந்து      21.07.2017

கோயம்பேடு மார்க்கெட்டில் 674 கடைகளில் நிலுவை: சொத்து வரி ரூ.1 கோடியே 77 லட்சம் வசூல்


கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பில் சொத்து வரியை நிலுவையில் வைத் துள்ள 729 கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், கோயம்பேடு சந்தையில் முகாமிட்டு, சொத்து வரி நிலுவை வைத்துள்ள கடை களை மூடும் நடவடிக்கையை மேற் கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 674 கடைகள் நிலுவை சொத்து வரியை செலுத்தின. இதனால் ரூ.1 கோடியே 77 லட்சம் வசூலானது. மீதமுள்ள கடைகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கணினியில் ஏற்பட்ட தவறு காரணமாக ஒரே கடைக்கு 2 ரசீதுகள் என 30 கடைகளுக்கு வந்துள்ளது. அதனால் அவற்றை ரத்து செய்துவிட்டோம். தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள 25 கடை களின் உரிமையாளர்கள், நிலுவை தொகையை செலுத்தி, மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படும்” என்றார்.

 


Page 5 of 3988