Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Agriculture

நதிகளை இணைத்தால் இந்தியா தன்னிறைவு பெறும்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய இயக்குநர்

Print PDF

தினமணி 19.03.2010

நதிகளை இணைத்தால் இந்தியா தன்னிறைவு பெறும்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய இயக்குநர்


திருநெல்வேலி, மார்ச் 18: நதிகளை இணைத்தால் இந்தியா தன்னிறைவு பெறும் என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர். மரிய சலத் தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை சார்பாக தேசிய நதிநீர் இணைப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளர் ச. மாணிக்கம் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜே. சாக்ரட்டீஸ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மரிய சலத், மேலும் பேசியதாவது:

நமது நாடு நீர் வளம் பருவ மழையையும், நிலத்தடி நீரையும் நம்பியே உள்ளது. இதில் நிலத்தடி நீர் பருவமழையைப் பொருத்தே இருக்கிறது. ஆனால் பருவமழை அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. அனைத்துப் பகுதிகளிலும் வெவ்வேறு அளவுகளில் பெய்கிறது. உதாரணமாக ராஜஸ்தானில் ஆண்டுக்கு 130 மில்லி மீட்டர் அளவு மழை பெய்கிறது. சிரபுஞ்சியில் 11,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இதனால் வேளாண்மை போதுமான அளவுக்கு நடைபெறுவதில்லை. சீரான தண்ணீர் விநியோகம் இருந்தால்தான் விவசாயம் நன்றாக நடைபெறும். அப்போது தான் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய முடியும்.

தற்போதுள்ள நிலைமைப்படி இந்தியாவில் ஆண்டுக்கு 4 ஆயிரம் பில்லியன் கன மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இப்போது 1953 பில்லியன் கன மீட்டர் மழையே பெய்கிறது. இதில் 1,122 பில்லியன் கன மீட்டர் மழை நீரையே நாம் பயன்படுத்த முடிகிறது.

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்றார்போலவும், பொருளாதார முன்னேற்றம், தொழில் வளத்தைப் பெருக்க தண்ணீர் மிகவும் அவசியம். ஆனால் இதற்குத் தேவையான தண்ணீர் இப்போதே இல்லாமல் இருக்கும்போது, எதிர்காலத்தில் இதைவிட கடினமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

2009 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை, மத்திய பருவத்தில் 24 சதவிகிதம் குறைவாக பெய்தது. இறுதி நேரத்தில் அதிகமாக பெய்தது. இதன் காரணமாக நாட்டில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன, சில இடங்களில் முழுமையாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் வேளாண்மை உற்பத்தி பொருள் பெருமளவு குறைந்தது. 2008 - 2009 ஆம் ஆண்டு உணவு பொருள்கள் 12 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது. இப் பொருள்கள் 2009 - 2010 ஆம் ஆண்டு 18 மில்லியன் உற்பத்தி செய்யப்பட வேண்டும். நாட்டின் வேளாண்மைத்துறை வளர்ச்சி நிர்ணயிக்கப்படும் இலக்கை விட, 2 சதவிகிதம் குறைவாகவே உள்ளது.

நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக தண்ணீர் வினியோகம் இருந்து, உணவு உற்பத்தி தேவையானளவுக்கு இருந்தால்தான் மக்கள் நலமுடன் வாழ முடியும். தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2002 ஆம் ஆண்டு கூறியது.

நதிநீர் இணப்புத் திட்டம் உலகிலேயும்,மனித வரலாற்றிலும் மிகப்பெரிய திட்டமாகும். இத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான 10 நதிகள் இணைக்கப்படும். மேலும் இமயமலையில் உற்பத்தியாகி வரும் 37 கிளை நதிகள் இணைக்கப்படும். இதற்காக பல்வேறு இடங்களில் 3 ஆயிரம் தடுப்பணைகள் அமைக்கப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக 12,500 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்படும்.

இத் திட்டத்தின் மூலம் மிகப்பெரிய நீர்வளத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பெற முடியும். இத் திட்டத்தில் 178 பில்லியன் கன லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லலாம். திட்டத்தை நிறைவேற்ற 5 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இத் திட்டத்தின் மூலம் 35 ஜிகா வாட்ஸ் மின்சாரம் பெறலாம். மேலும் இதனால் 35 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும்.

நதிகளை இணைத்தால், உணவு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் இந்தியா தன்னிறைவு பெறும். தற்போதுள்ளபோல உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் நிலை, எந்தச் சூழ்நிலையிலும் ஏற்படாது.

சில மாநில அரசுகள் நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒத்துழைப்பு தர மறுத்து வருகின்றன. அம் மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார் மரிய சலத்.

சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத்துறைத் தலைவர் என். ராஜலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சி. ஜெசிந்தா ஜெயக்குமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

பொருளாதாரத் துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 19 March 2010 10:47
 

மழைநீரை தேக்க மாற்று திட்டம்

Print PDF

தினமணி 07.01.2010

மழைநீரை தேக்க மாற்று திட்டம்

புதுச்சேரி, ஜன.6: புதுச்சேரியில் மழைநீரை தேக்குவதற்காக மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக வேளாண் செயலர் டி.சி.சாஹூ தெரிவித்தார்.

புதுச்சேரி வேளாண்துறையின் நிலநீர் பிரிவின் சார்பில், தனியார் தொழிற்சாலை அலுவலர்களுக்கான மழை நீர் சேகரிப்பு, நீர்வளப் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மைப் பற்றிய கருத்தரங்கம் காமராசர் கல்வி வளாக கருத்தரங்க கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து வேளாண் செயலர் டி.சி.சாஹூ பேசியது:

நீரை வீணடிப்பது காலையில் பல் துலக்குவதற்கு, குழாயை திருப்புவதில் இருந்து தொடங்குகிறது. இதனை தவிர்த்து போதுமான நீரைப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சிக்கனமாகப் பயன்படுத்தினால், நாம் பயன்படுத்தும் நீரின் அளவு குறையும்.

இதனால் நாம் நிலத்தடி நீரை உறிஞ்சுவது குறைந்து நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படும். தொழிற்சாலையிலிருந்து கழிவு நீரை வெளியேற்றினால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும். இக்கழிவு நீரை சுத்திகரித்து, கழிவறைகளிலாவது பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றார்.

÷வேளாண் இயக்குநர் சத்தியசீலன் பேசும்போது, "விவசாயம் செய்ய மிக முக்கிய தேவை நீர்வளம். நிகழ்ச்சி மற்றும் விருந்துகளில் குடிநீர் பாட்டில்களை வைப்பது தற்போது கெüரவமாகக் கருதப்படுகிறது.

மாநில பிரிவினை நடைபெறும்போது நீர் வளத்தை வைத்தே பிரிக்கப்படுகிறது. வள்ளுவனே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நீர் இன்றி அமையாது உலகு என்று கூறியிருக்கிறார்.இத்தகைய நீரை கிடைக்கும்போது சேமிக்க வேண்டும். சேமித்த நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்என்றார்.

கல்வித்துறையின் மாவட்ட பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் கிருஷ்ணன் பேசும்போது, "கிடைக்கின்ற நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, மழை நீரை சேமிப்பது, கழிவு நீர் மேலாண்மை குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்கெனவே விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தனியார் தொழிற்சாலை அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதுஎன்றார்.

மழைநீர் சேகரிப்பின் அவசியம், சேகரிப்பு முறைகள், நீர் பராமரிப்பு, நீர் வள பாதுகாப்பு, கழிவு நீர் மேலாண்மை குறித்த கருத்துகளை அதற்கான சிறப்பு வல்லுநர்களின் மூலமாக விளக்கப்பட்டன. தொழில் மற்றும் வர்த்தகத்துறை இயக்குநர் பன்னீர்செல்வம், நிலத்தடி நீர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன்,வேளாண் பொறியியல் பிரிவின் கூடுதல் இயக்குநர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:43
 

உணவுப் பொருட்கள் கையிருப்புநிர்ணயித்ததை விட கூடுதலாக இருந்தால் பறிமுதல்: திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 07.01.2010

உணவுப் பொருட்கள் கையிருப்புநிர்ணயித்ததை விட கூடுதலாக இருந்தால் பறிமுதல்: திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி: ""திருச்சி மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லரை வணிகர்கள் அரசு அனுமதிக்கப்பட்ட அளவுகளில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும்,'' என்று கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் மேலும் கூறியதாவது: திருச்சி மாவட்டத்திலுள்ள சில்லரை மற்றும் மொத்த வணிகர்கள் பல்வேறு கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள அளவுகளே அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு வகை, எண்ணெய் வகை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் சர்க்கரை ஆகியவை இருப்பு வைக்க வண்டும். அரிசி ஆலை நடத்தும் மொத்த வணிகர்கள் மூவாயிரம் குவிண்டால் அரிசியும், அரிசி ஆலை நடத்தாத வணிகர்களும், அரிசி ஆலை மட்டும் வைத்திருப்பவர்கள் தலா ஆயிரம் குவிண்டால், சில்லரை அரிசி வணிகர்கள் 200 குவிண்டால், அதிகபட்ச அளவாக இருப்பு வைக்கலாம். மாநகராட்சி பகுதியிலுள்ள மொத்த வணிகர்கள் ஆயிரம் குவிண்டால் கோதுமையும், சில்லரை வணிகர்கள் 31.25 குவிண்டால், மாவட்ட தலைநகரத்தில் மொத்த வணிகர்கள் 750 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 18.25 குவிண்டால், இதர பகுதியிலுள்ள மொத்த வணிகர்கள் 437.50 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 12.50 குவிண்டால் அதிகபட்ச அளவாக இருப்பு வைக்கலாம்.

மாநகராட்சிப் பகுதியிலுள்ள பருப்பு மொத்த வணிகர்கள் இரண்டாயிரத்து 500 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 62.50 குவிண்டால், மாவட்டதலைநகரில் மொத்த வணிகர்கள் ஆயிரத்து 250 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 50 குவிண்டால், இதர பகுதியிலுள்ள மொத்த வணிர்கள் ஆயிரத்து 250 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 50 குவிண்டாலும் அதிகபட்சம் இருப்பு வைக்கலாம். உணவு எண்ணெய் மொத்த வணிகர்கள் "' கிரேடு நகரத்தில் 600 குவிண்டால் எண்ணையும், சில்லரை வணிகர்கள் 20 குவிண்டால், "பி' கிரேடு நகர மொத்த வணிகர்கள் 400 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 12 குவிண்டால், "சி' கிரேடு நகரத்திலுள்ள வணிகர்கள் 250 குவிண்டால், சில்லரை வணிகர்கள் எட்டு குவிண்டால் அதிகபட்ச அளவாக இருப்பு வைக்கலாம். எண்ணெய் வித்து "' கிரேடு நகர மொத்த வணிகர்கள் ஆயிரத்து 500 குவிண்டால், சில்லரை வணிகர்கள் நூறு குவிண்டால், "பி' கிரேடு நகர மொத்த வணிகர்கள் ஆயிரம் குவிண்டால், சிறுவணிகர்கள் 75 குவிண்டால், "சி' கிரேடு நகர மொத்த வணிகர்கள் 500 குவிண்டால், சில்லரை வணிகர்கள் 50 குவிண்டால் அதிகபட்சம் இருப்பு வைக்கலாம்.அனைத்து வணிகர்களும் சர்க்கரை அதிகபட்ச அளவு இருப்பாக இரண்டாயிரம் குவிண்டால் வரை இருப்பு வைக்கலாம். டி.ஆர்.., தலைமையில் நடத்தப்பட்ட வணிகர்கள் கூட்டத்தில் அரசு நிர்ணயித்த அளவு தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக இருப்பு இருந்தால் பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:46
 


Page 4 of 7