Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் விரைவில் பாதாள சாக்கடை பணி

Print PDF
தினகரன்                 22.05.2013

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் விரைவில் பாதாள சாக்கடை பணி


கோவை, :  விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை பணி துவக்கப்படும் என கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்:

கோவை மாநகராட்சியில் முன்பிருந்த 72 வார்டுகளிலும், மத்திய அரசின் ஜே.என்.என்.யு.ஆர்.எம் திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை, 650 கி.மீ தூரத்துக்கும் அதிகமாக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணி நடந்து வருகிறது. அடுத்து, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு கிராம பஞ்சாயத்து என 11 உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிவால் வாரியம் மேற்கொண்ட ஆய்வுப்பணிக்கு கட்டணமாக ரூ.60.37 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இதில், ரூ.43.49 லட்சத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே செலுத்திவிட்டன. மீதமுள்ள தொகை மாநகராட்சி சார்பில் செலுத்தப்படும். விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்று, இப்பகுதியிலும் பாதாள சாக்கடை பணி விரைவில் துவக்கப்படும்.

இதுபற்றி மேயர் செ.ம .வேலுசாமி கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை பணி 100 சதவீதம் நிறைவடைந்தால் சாக்கடை நீர் வெளியே தெரியாது. அனைத்தும் பூமிக்குள் கொண்டுசெல்லப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றுவிடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிநீராகவும், மீதமுள்ள திடக்கழிவை உரமாகவும் பயன்படுத்தப்படும். அத்துடன், நகரில் சாக்கடை நீர் கண்ணுக்கு தெரியாத காரணத்தால் இனி கொசுத்தொல்லையும் இருக்காது. சுகாதார சீர்கேடும் ஏற்படாது. பாதாள சாக்கடை பணி முடிவடையும் வரை சாலைகள் உடைக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பணி முடிவடைந்தவுடன் சாலைகள் வழக்கம்போல் சீரமைக்கப்படும்’’ என்றார்.
 

ஆரணியில் நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது!

Print PDF
தினமணி        21.05.2013

ஆரணியில் நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்தது!


ஆரணி நகரில் ரூ.43 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நகரில் கடந்த 2007-08ஆம் ஆண்டில் கமண்டல நாகநதிக்கரை அருகேயுள்ள சுடுகாட்டில் ரூ.43 லட்சத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுமான பணி 3 ஆண்டுகளில் நிறைவு பெற்றது.

இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலிருந்த ஆதரவற்றவரின் சடலம் இங்கு எரியூட்டப்பட்டது. ஆனால் சடலம் சரியாக எரியவில்லை.

இப்பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தினர், மேலும் சிறு பணிகள் நடைபெற உள்ளது. இதனை சீர்செய்து விடலாம்' என்றனர். இதையடுத்து, இப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இத்தகன மேடையை விரைவாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், நகர மக்களும் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஜய்பிங்ளே உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆதரவற்றவரின் சடலம் ஆரணி தகன எரிவாயு மேடையில் எரித்து சோதனை செய்வதற்கு கொண்டுவரப்பட்டது. திங்கள்கிழமையும் இச்சடலம் எரித்து சோதனையிடப்பட்டது. சரியான முறையில் எரிந்ததாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இத்தகன எரிவாயு மேடை செயல்முறைக்கு வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும். இதனை பராமரிக்க தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று நகராட்சி ஆணையர் பா.செல்வம் தெரிவித்தார்.

நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி கருணாகரன், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சுரேஷ், ஜெயப்பிரகாஷ், வில்வநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், பிச்சாண்டி, கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

மாநகராட்சியில் அம்மா திட்ட உணவகம்ரூ.61 லட்சத்தில் கட்டுமான பணி துரிதம்

Print PDF
தினமலர்        15.05.2013

மாநகராட்சியில் அம்மா திட்ட உணவகம்ரூ.61 லட்சத்தில் கட்டுமான பணி துரிதம்


ஈரோடு: தமிழக முதல்வரின் "அம்மா' திட்டத்தின் கீழாக, குறைந்த விலையில் உணவு வழங்க, ஆர்.என்.பாளையம், கொல்லம்பாளையம் பகுதியில், 61 லட்சத்தில் கட்டுமான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் உணவகம் திறக்கப்பட உள்ளது.சென்னை மாநகராட்சியில் குறைந்த விலையில் உணவு வழங்கும் நோக்கில், அம்மா திட்டத்தின் கீழாக, அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இட்லி ஒரு ரூபாய், கலவை சாதங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல்வர் துவக்கிவைத்த திட்டத்துக்கு, சென்னை மாநகராட்சியில் மக்களிடையே பெறும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழகம் முழுவதுமாக மாநகராட்சிகளில் துவக்க உத்தரவிட்டார்.ஈரோடு மாநகராட்சியில் அம்மா திட்ட உணவகங்கள் அமைக்க முடிவு செய்து, முதற்கட்டமாக மண்டலங்கள் தோறும் ஒரு உணவகம் திறக்க, ஆர்.என்.புதூர், வீரப்பன்சத்திரம், காந்திஜி ரோடு, கொல்லம்பாளையம் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.

இதனை அடுத்து கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை, சூரியம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஆர்.என்.புதூர் ஆகிய, இரண்டு இடங்களில், 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவகத்துக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகளை துவக்கியுள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகம் கூறியதாவது:ஈரோடு மாநகராட்சியில் முதல்வரின் அம்மா திட்ட உணவகங்கள், முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துவக்கப்படுகிறது. கொல்லம்பாளையத்தில், 18 லட்சத்திலும், ஆர்.என்.புதூரில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.உணவுகள் சமைப்பதற்கு தலா, 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள், 15 நாட்களில் முடித்து ஒப்படைக்கப்படும். முதல்வர் அவர்கள் திறந்து வைப்பார்கள். வ.உ.சி., பூங்கா வளாகம், காந்திஜி ரோடு ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும், எனக்கூறினார்.
 


Page 11 of 96