Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

அவிநாசி பேரூராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு

Print PDF

தினமலர் 30.07.2009

 

குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி

Print PDF

தினமணி 28.07.2009

குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி

குளித்தலை, ஜூலை 27: குளித்தலை நகராட்சியில் சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து குளித்தலை நகராட்சி மற்றும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக்குழு பெண்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

முகாமிற்கு நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்து விளக்கமளித்தார். குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த ஜூன் 5-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் குப்பைகளை மக்கும், மக்காத குப்பையெனத் தரம் பிரித்து, அவற்றின் மூலம் உரம் தயாரிக்க முதல்கட்டமாக நகராட்சியிலுள்ள 3 வார்டு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டது.

வீடுகளுக்கு 2 குப்பைக் கூடைகள் வழங்கி மக்கும், மக்காத குப்பைகள் எதுவென்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள நகராட்சி மூலம் குறிப்புகள் அடங்கிய அட்டை வழங்கப்பட்டது. தற்போது, மேலும் 9 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வார்டு பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுக்கு இத்திட்டம் குறித்து பயிற்சி முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.

சுமார் 250 பெண்கள் பங்கேற்ற இம்முகாம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்க முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மண்புழு உரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் ஜி. தேவிகா, புருஷோத்தமன், . ரம்யாரேகா, பி. ராமலிங்கம், எம். ரமணிமுருகன், பி. ஆன்ந்தகுமார், உசேன்கான், து.அண்ணாத்துரை, ஆர்.மாணிக்கம், எஸ்னோரா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் பி.விஜய்ஆனந்த், வி.கணபதி, கே.மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் மு.செல்வராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வேலியப்பன் நன்றி கூறினார்.

 

திடக்கழிவு மேலாண்மை சேவைக்கட்டணம்

Print PDF

தினமணி 27.07.2009

திடக்கழிவு மேலாண்மை சேவைக்கட்டணம்

திண்டுக்கல், ஜூலை 25: திண்டுக்கல் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு கழிவுகளை அப்புறப்படுத்த சேவைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர்மன்ற ஒப்புதலுடன் இயற்றப்பட்ட இத்தீர்மானத்தின் மீது மாறுதல் அல்லது ஆலோசனைகள் இருந்தால், ஆக. 24 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையர், திண்டுக்கல் நகராட்சி, திண்டுக்கல் என்ற முகவரியில் தெரிவிக்கலாம். இக்காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் ஆட்சேபணைகள், கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என, நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 27 July 2009 06:40
 


Page 63 of 66