Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Master Plan

மகாராஷ்டிர அரசு முடிவு மும்பையை சர்வதேச நகரமாக உருவாக்க 3 புதிய திட்டங்கள்

Print PDF

தினகரன் 05.08.2010

மகாராஷ்டிர அரசு முடிவு மும்பையை சர்வதேச நகரமாக உருவாக்க 3 புதிய திட்டங்கள்

மும்பை, ஆக. 5: மும்பையை சர்வதேச நகரமாக உருவாக்க மகாராஷ்டிரா அரசு, சிட்டி ஆப் சிட்டி(நகரின் நகரம்), சிட்டி ஆப் கனெக்ஷன்(இணைப்பு நகரம்), சிட்டி ஆப் ஐலேண்ட்(தீவு) நகரம் என்ற பெயர்களில் மூன்று புதிய திட்டங்களை வகுத்துள்ளது.

மும்பை மற்றும் அதை சுற்றியிருக்கும் நகரப்பகுதிகளின் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிரா அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணையம் என்ற ஏஜென்சி உருவாக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் கீழ் மும்பை, புறநகர்ப்பகுதிகள் மட்டுமல்லாது தானே, ராய்கட் மாவட்டங்களும், நவி மும்பையில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு வகுத்துள்ள புதிய திட்டத்தின் படி புனே மற்றும் நாசிக் நகரங்களும் மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் கீழ் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.

மும்பை மற்றும் மும்பையை சுற்றியிருக்கும் நகரங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆய்வு செய்வதற்காக சிங்கப்பூரை சேர்ந்த சபர்பனா கார்பரேஷன் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை தயாரித்து புதிய வளர்ச்சித் திட்டங்களின் வரைவுகளை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் பரிந்துரைகள்படி சிட்டி ஆப் சிட்டி(நகரின் நகரம்), சிட்டி ஆப் கனெக்ஷன்(இணைப்பு நகரம்), சிட்டி ஆப் ஐலேண்ட்(தீவு) நகரம் என்ற பெயர்களில் மூன்று புதிய திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மும்பையை முதலில் உலகத்தரம் வாயந்த நகரமாகவும் பின்னர் குளோபல்(சர்வதேச) நகரமாகவும் உருமாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டப்பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசு வகுத்துள்ள மூன்று புதிய திட்டங்கள் பற்றிய விவரம் வருமாறு:

சிட்டி ஆப் சிட்டி:

இந்த திட்டத்தின் கீழ், விரார் முதல் அலிபாக் வரையிலான பகுதிகளில் 5 புதிய நகரங்கள் உருவாக்கப்படும். நவி மும்பை அருகிலும் அலிபாக்கில் உள்ள ரேவஸ் என்ற இடத்திலும் புதிய விமான நிலையங்கள் அமைப்பது இத்திட்டத்தில் அடங்கும்.

சிட்டி ஆப் கனெக்ஷன்:

இந்த திட்டத்தின் படி, முமபையை சுற்றியிருக்கும் அனைத்து சிறிய நகரங்களும் சாலை மார்க்கமாக மட்டுமல்லாது, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில், டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு ரயில் மூலம் இணைக்கப்படும்.

சிட்டி ஆப் ஐலேண்ட்:

மும்பையில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை போக்குவதற்காக கடல் மற்றும் கழிமுகப் பகுதிகளை மேடாக்கி புதிய நிலங்கள் உருவாக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்

Print PDF

தினமலர்   04.08.2010

ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், விதிமுறைகளை மீறி பிரமாண்ட கட்டடம் கட்டுவது அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் "கட்டட காடுகளை' கட்டுப்படுத்த "மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், விதிமுறை மீறி கட்டடம் கட்டுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில், ஊட்டி அருகே கிராமப் பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அடுக்குமாடி, ரிசார்ட்ஸ், கல்வி நிறுவனங்களை கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த செயல்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல ஆளும் கட்சியினரை கோடீஸ்வரர்களாக உருவாக்கும் முக்கிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர், கட்டட ஒப்பந்ததாரர்களாகவும் மாறி உள்ளனர்.
இவர்களால், ஊட்டி அருகே பேரார், கொல்லிமலை, ஆடாசோலை, முத்தொரை நடுவட்டம், பாலாடா உள்ளிட்ட பல பகுதிகளில், ஊராட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வரன்முறைகளை மீறி, பிரமாண்ட கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததா, மாநில அரசு அனுமதி கொடுத்ததா என்பது குறித்து கட்டட உரிமையாளர்கள் தெரிவிப்பதில்லை.

குறிப்பிட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகளையும், ஊராட்சி நிர்வாகிகளையும் பணம் படைத்தவர்கள் "கவனிப்பதே' முக்கிய காரணம் என்ற குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வரிசையில், தற்போது ஊட்டி அருகே தும்மனட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பேரார் பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டடம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறிய குடியிருப்புக்கான அனுமதியின் பேரில் பெரிய நிறுவனம் அப்பகுதியில் கட்டப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கட்டடம் கட்ட புவியியல் துறை, மண்வளத்துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து இப்பகுதி ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியது: ஊராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட 1,300 சதுர அடிக்குள் இருந்தால் அனுமதி கொடுக்கலாம் என்பதன் அடிப்படையில், இந்த பகுதியில் தனியார் கல்லூரி கட்ட ஊராட்சியிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. 139 சதுர அடியில், நூலகம் உட்பட பல்வேறு வகுப்பறை கட்ட தனித்தனியாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏழு மீட்டர் உயரத்துக்குள் கட்டடம் எழுப்ப உள்ளதாகவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் தளம் கட்டும்போது ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டால் கொடுக்கப்பட்ட அனுமதியை மீறி, விதிமுறை மீறி அந்த கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிய வரும். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகங்களின் நடவடிக்கை குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தும் கூட, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதியளவில் கண்காணிப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.புகார்களின் அடிப்படையில், கட்டட ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள், கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்து, கட்டட உரிமையாளர்களுக்கு சாதகமான அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து வருவதும், இத்தகைய கட்டடங்கள் உயர்வதற்கு காரணிகளாக அமைந்து வருகிறது. துணை முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மலை மாவட்டத்தின் தற்போதைய அழகையாவது பாதுகாக்க முடியும் என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.

-நமது நிருபர்-

 

உள்ளூர் திட்ட குழும கூட்டம்

Print PDF

தினகரன் 31.05.2010

உள்ளூர் திட்ட குழும கூட்டம்

ஊட்டி, மே 31:உள்ளூர் திட்ட குழுமத்தின் கூட்டம் ஊட்டி யில் நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், ஊட்டி ஏரியை சுற்றிலும் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் பிரதான புல்வெளி நில உபயோகத்தில் எந்த ஒரு நில உபயோக மாற்றமும் செய்ய கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் குடியிருப்பு பகுதி, பலதரப்பட்ட குடியிருப்பு பகுதி, மரங்கள் உள்ள பகுதி தற்போது திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் விவசாய பகுதியாக மாற்றப்பட்டபின் அவ்வாறு மாற்றப்பட்டவைகளை ஏற்கனவே உள்ளவாறே நில உபயோகத்தை மாற்றி அமைக்க பரிந்துரை செய்வது.தற்போதுள்ள பிரதான சாலைகள், தனியார் சாலைகளை ஒட்டியுள்ள குடியிருப்புகள், வணிக உபயோக கட்டிடங்கள் அமைந்திருந்தால் அந்த இடங்களை பிரதான குடியிருப்பு மற்றும் பலதரப்பட்ட உபயோக பகுதியாக நில உபயோகத்தை நிர்ணயிக்க பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது. 1993ம் ஆண்டு மாஸ்டர் பிளான் திட்டத்தில் இணக்கத்திற்கு முன் முழுமையாக அபிவிருத்தியான பகுதிகள் பின் தற்போது திருத்தி அனுமதிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் விவசாய பகுதியாக இருந் தால் ஏற்கனவே 1993ம் ஆண்டுக்கு முன் அபிவிருத்தி அடைந்த காரணத்தால் இதை பி.ஆர்., சோன் பகுதியாக மாற்ற பரிந்துரை செய்வது.

திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் திட்டத்தில் உத்தேச நில உபயோகம் 2011 ஆண்டு வரையிலான உத்தேச நில உபயோகம் பரப்பளவு பற்றிய பட்டியல் மற்றும் உத்தேச நில உபயோக வரைப்படம் ஆகியவை 2011 ஆண்டு வரைக்கானது மட்டுமே ஆகும்.

ஆகவே மாஸ்டர் பிளான் திட்டக்காலம் 2011 உடன் முடிவடைவதால் ஒரு புதிய முழுமைத்திட்டம், 2031 வரை நடப்பில் இருக்கும்படி தயார் செய்ய கேட்டு கொள்ள முடிவு செய்யப்பட்டது. மாஸ்டர் பிளான் கட்டுப்பாட்டு விதிகளில் பி.வி. சோனில் குறைந்தபட்ச மனையளவு பி.ஆர்., சோனில் உள்ளதுபடி வரையறுக்க வேண்டும்.

நகர் ஊரமைப்பு ஆணையர் சுற்றறிக்கையில் ந.எண்.2230/2008/மஇ.கவி நாள் 5.12.2008ன்படி காப்புக்காடுகள் எல்லையில் இருந்து 150 மீட்டர் சுற்றலடவில் எந்த ஒரு கட்டம் கட்ட அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்த தெளிவான விதிகள் ஏதும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில இல்லை. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (மலைப்பகுதி) கட்டிட விதி 7(2)ன்படி காப்புக்காடுகள், மரங்கள் பகுதிகளின் எல்லையில் இருந்து 150 மீட்டர் சுற்றளவில் விவசாயத்திற்கோ அல்லது எந்த ஒரு உபயோகத்திற்கோ நிலம் ஒப்படை செய்யப்படக் கூடாது என்று மட்டுமே உள்ளது.

ஆகவே காப்புக்காடுகள் எல்லையில் இருந்து 150 மீட்டர் சுற்றளவில் வனத்துறையின் மறுப்பின்மை சான்று பெற்று கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கும் வகையில் கட்டுப்பாட்டு விதிகள் வரையறுக்க கேட் டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், குதிரை பந்தய மைதானத்தை சுற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்பது வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உத்தேச நில உபயோக வரைப்படத்திலும் கட்டிடவிதி எண்.5(5)லும் குதிரைப்பந்தய ¬மாதனத்தை சுற்றிலும் 200 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இதுபற்றி வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளைத் தெளிவாக்க கேட்டுக் கொள்ளவும், மேலும் அங்கீகரிக்கப்பட்ட முழுமைத் திட்ட கட்டுப்பாட்டு விதிகளில உள்ளவாறு இப்பகுதியில் கூரைமாற்றம் செய்தல், மராமத்துப்பணிகள் செய்தல் மற்றும் நிலையில் உள்ள கட்டுமான விதிகளுக்கு உட்பட்டு 25 சதவீதம் கட்டிட பரப்பளவு கூடுத லாக கட்டிக் கொள்ள அனுமதிக்கோரவும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே அங்கீகரிப்பட்ட மாஸ்டர் பிளானில் இருப்பது போல நில உபயோக சர்வே எண் பட்டியல் பற்றி இடங்கள் குறிப்பிடப்பட்டு சர்வே எண்கள் குறிப்பட வேண்டும். மாஸ்டர் பிளான் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின் மனை அங்கீகாரம் பற்றி விதிகள் ஏதும் இல்லை. எந்த ஒரு அபிவிருத்தியும் உள்ளூர்த் திட்டக்குழுவின் மனை அங்கீகாரம் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது. ஊட்டியில் நடைபெற்றது

ஏற்கனவே அங்கீகரிப்பட்ட மாஸ்டர் பிளானில் இருப்பது போல நில உபயோக சர்வே எண் பட்டியல் பற்றி இடங்கள் குறிப்பிடப்பட்டு சர்வே எண்கள் குறிப்பட வேண்டும். மாஸ்டர் பிளான் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின் மனை அங்கீகாரம் பற்றி விதிகள் ஏதும் இல்லை. எந்த ஒரு அபிவிருத்தியும் உள்ளூர்த் திட்டக்குழுவின் மனை அங்கீகாரம் இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது.

ஊட்டி மாஸ்டர் பிளான் பகுதியைச் சுற்றிலும் உள்ள பஞ்சாயத்துப் பகுதிகளில் ஏற்படும் வேகமான கட்டிட அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அரசு உத்தரவு எண் 754 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள் 22.11.1994ல் பிறப்பித்த உத்தரவுப்படி நீலகிரி மாவட்டப் பகுதி திட்டக்குழுமம் அமைக்க வேண்டும்.

ஏற்கனவே அரசு உத்தரவு எண்.1390 வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை நாள்8.9.1993ல் நீலகிரி மாவட்ட அனைத்து தாலுகாக்களையும் உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆர்.டி.ஆர்..., ஏற்படுத்தவும், ‘ஏஏஏமற்றும் எச்..சி.., அதிகாரங்களை இந்த குழுமத்திற்கு வழங்கிடவும், ஊட்டி திட்டப்பகுதியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு கட்டிடங்கள் உயரக்கட்டுப்பாட்டை 15 மீட்டர் ஆக உயர்த்தி தர வேண்டும்.

கட்டிட பரப்பளவு 300 சமீ வரை அனைத்து உபயோக கட்டிடங்களுக்கும் உள்ளூர் திட்டக்குழுவே திட்ட அனுமதி வழங்க உரிய அதிகாரங்கள் வழங்கவும், படிவம் 2ல் பெறப்பட்ட ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசணைகள் பட்டியலிட்டு உரிய உள்ளூர் திட்டக்குழு பரிந்துரையுடன் நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர், கோவை அவர்களின் வாயிலாக அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

 


Page 4 of 6