Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Master Plan

மாஸ்டர் பிளான் சட்டம் நீலகிரியின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்

Print PDF

தினமணி    28.05.2010

மாஸ்டர் பிளான் சட்டம் நீலகிரியின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும்

உதகை மே 27: நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஆண்டிலிருந்து புதிய மாஸ்டர் பிளான் திட்டம் அமலுக்கு வரவிருப்பதால், இம்மாவட்டத்தின் தன்மைக்கேற்ப

நாட்டின் பிற மலை மாவட்டங்களில் உள்ள மாஸ்டர் பிளான் சட்டத்தைப் போலவே இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டுமென, உதகையில் நடைபெற்ற அனைத்துப் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் என சுமார் 2,000-க்கும் அதிகமான கட்டடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவற்றை இடிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் தமிழக அரசு இப் பிரச்னையில் தலையிட்டு ஒருமுறை சிறப்பு அனுமதியளித்து அந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்ட அனைத்துó அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு, முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தது.

நீலகிரி மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.பிரபு தலைமையிலான இக்குழுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வரும் உறுதியளித்தார். தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கிலும் தனது கருத்தை தெரிவித்தது. இதனால் அந்த கட்டடங்களை இடிக்கும் பணிகள் அப்போது நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் கட்டட இடிப்புப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியதால் அனுமதியற்ற மற்றும் விதிகளை மீறிய கட்டடங்களுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டு, இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடமும் இக்குழுவினர் நேரில் சந்தித்து விவாதித்தனர்.

தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல்வரையும் இக்குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழக அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா பா.மு.முபாரக், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சவுந்திரபாண்டியன், துணை முதல்வரின் செயலர் தீனபந்து, குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, உதகை நகராட்சி தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோருடன் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.

அந்த ஆலோசனையின்போது நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகளைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக உதகையில் வியாழக்கிழமை அனைத்துó அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு அமைப்பாளர் ஜே.பி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக சர்பில் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கெம்பையா, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெள்ளி உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிமுகவினர் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நீலகிரி மாவட்டத்திலுள்ள விதி மீறிய மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் தற்போது இருக்கும் சிறப்பு விதியைப் பயன்படுத்தி ஒருமுறை வரன்முறைப்படுத்துவதற்கான முயற்சிகளை கொள்கை அளவில் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கட்டட உரிமையாளர்களும் தங்களது வரைபட சான்றுகளுடன் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள மாஸ்டர் பிளான் சட்டம் இவ்வாண்டுடன் முடிவடைந்து புதிய மாஸ்டர் பிளான் சட்டம் 2011ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர இருப்பதால் அந்த சட்டத்தை நீலகிரி மாவட்டத்தின் தன்மைக்கேற்ப நடைமுறைப்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் உள்ள பிற மலை மாவட்டங்களான டார்ஜிலிங், சிம்லா உள்ளிட்ட இடங்களுக்கு அரசின் சார்பில் ஒரு குழு சென்று நேரில் ஆய்வு செய்து அங்குள்ளதைப் போலவே நீலகிரியிலும் அமல்படுத்த வேண்டும்.

விதி மீறிய மற்றும் அனுமதியற்ற கட்டடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அரசு சிறப்புஅனுமதி அளித்து கட்டடங்கள் வரன்முறைப்படுத்தப்படும். அதனால், இதை தொடர் நடவடிக்கையாக கருதி விடக்கூடாது. நீலகிரி மாவட்டத்தில் வணிகமயமாதலை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மாவட்த்தின் பசுமைத்தன்மை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

விரைவில் சென்னை, மதுரை, கோவையில் ரூ.1,504 கோடியில் ஒருங்கிணைந்த நகரங்கள்

Print PDF

தினமலர் 22.04.2010

விரைவில் சென்னை, மதுரை, கோவையில் ரூ.1,504 கோடியில் ஒருங்கிணைந்த நகரங்கள்

சென்னை:'சென்னை, மதுரை, கோவையில் 2013ம் ஆண்டுக்குள் 1,504 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஆயிரத்து 270 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ஒருங்கிணைந்த நகரங்கள் உருவாக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மானிய கோரிக்கையில் அரசு வெளியிட்டுள்ள திட்டங்கள்:தமிழகத்தில் உள்ள பெருநகரங்களை, 2013ம் ஆண்டிற்குள் குடிசைகள் அற்ற நகராக மாறும் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மாநகரங்களில் நடப்பு ஆண்டில் 1,504 கோடி ரூபாய் செலவில், 35 ஆயிரத்து 270 அடுக்குமாடி குடியிருப்புகள் 'ஒருங்கிணைந்த நகரங்களாக' அமைக்கப்படும்.கடந்த 2006 முதல் 2011க்குள் 3,000 கோடி ரூபாய் செலவில், 80 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டு, இதுவரை 46 ஆயிரத்து 650 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மீதமுள்ள 33 ஆயிரத்து 350 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்டமிடல், வடிவமைத்தல் பணி நடந்து வருகிறது. நடப்பாண்டில் 10 ஆயிரம் வீடுகளும், அடுத்த ஆண்டில் 20 ஆயிரம் வீடுகளும் கட்டப்படும்.சுனாமி வீடுகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு 520 கோடி ரூபாயில், 11,520 குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

திருவொற்றியூரில் 3,616 வீடுகள் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. மெரீனாவில் 2,280 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,576 குடியிருப்புகள் மெரீனா மறு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டும் பணி நடப்பாண்டில் துவங்கும். மேலும், எட்டு கடலோர மாவட்டங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத் தப்படும்.

சென்னைத் துறை முகம், மதுரவாயல் மேம் பால சாலைத் திட்டப்பணியால் பாதிக்கப் படும் குடும்பங்களுக்கு 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளும், பாதிப்புள்ள பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் குடும்பங்களுக்கு சென்னை புறநகர் பகுதியில் 400 கோடி ரூபாய் செலவில் ஆட்டோ நகர் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 35 ஆயிரத்து 962 இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்வியல் ஆதார பயிற்சிகள் அளிக்கப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சி பகுதியில் எல்லையினை மறு ஆய்வு செய்து அரசிடம் சமர்ப்பிக்கப்படும். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில், 17 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு கீழ்தள இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப் படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Last Updated on Saturday, 24 April 2010 05:43
 

கோவையில் பெருநகரவளர்ச்சி குழுமம் அமைக்க முயற்சி

Print PDF

தினமணி 21.04.2010

கோவையில் பெருநகரவளர்ச்சி குழுமம் அமைக்க முயற்சி

கோவை, ஏப். 17: சென்னையைப் போல, கோவை, மதுரை, திருச்சியில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் இந்த ஆண்டிலேயே உருவாக்க முழுமுயற்சி எடுக்கப்படும் என்று, இந்திய கட்டுமானர்கள் சங்கத்தின் (பிஏஐ) மாநில அமைப்பு தலைவர் கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுவையை உள்ளடக்கிய பிஏஐ மாநில அமைப்பின் தலைவராக சனிக்கிழமை அவர் பதவியேற்றுக் கொண்டார். கோவையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

"சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை அடைந்து இருந்தாலும், இன்னும் ஏராளமான சவால்களைச் சந்தித்து வருகிறது' என்று, நிகழ்ச்சியில் பேசிய கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் குறிப்பிட்டார்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக அண்மையில் ரூ. 3.4 லட்சம் கோடியை பிரதமர் ஒதுக்கியுள்ளார். நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கட்டட வல்லுநர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பல்வேறு திட்டங்களுக்கு பொது மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அரசு ஊக்குவிக்கிறது. இதை கட்டுமானத் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய பிஏஐ தலைவர் விஸ்வநாதன், நடப்பு ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை (சிஎம்டிஏ) போல, கோவை, மதுரை, திருச்சியிலும் பெருநகர வளர்ச்சி குழுமங்களை உருவாக்க முழு முயற்சி எடுக்கப்படும். கட்டுமானத் துறைக்கான பலமுறை வரிகளைக் குறைப்பது, ஸ்டீல், சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருள்களின் திடீர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நெறிப்படுத்தும் அமைப்பை ஏற்படுத்துவது, கட்டுமானத் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

பிஏஐ அகில இந்திய தலைவர் பகவான் ஜே.தியோகர், தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, பிஏஐ முன்னாள் தலைவர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், வி.ராமசந்திரன், கட்டடக் கலை வல்லுநர் டி.எஸ்.ரமணி சங்கர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 09:27
 


Page 5 of 6