Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினகரன்                03.01.2014

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல் பாடு மற்றும் பொது சுகா தாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராணிவள்ளி முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித் தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்.

முகாமில் செயல் அலுவலர் பொன்னம்பலம் கலந்து கொண்டு பேசுகை யில், ‘சுரண்டை பேரூராட்சி பகுதியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய  மற்றும் மாநில அரசுகள் மானியத்துடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி நபர் குழுக் கடன், சுழல் நிதி விரைவில் வழங்கப்படும். தனிநபர் கழிப்பிடம் அவசியம். பொது சுகாதாரத்தை பெரியோர், சிறியோர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார். பின்னர் அவர் பொது சுகாதார விழிப்புணர்வு நோட்டீசை பொது மக்களிடம் வழங்கினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், வசந்தா, செல்வி, கண்ணன், செல்வன், அருணாசலக்கனி, கல்பனா, சமுத்திரக்கனி, சங்கரா தேவி, இந்திரா, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பொன்னுத்தாய், ஜீவக்கனி, சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு "ஆர்.ஓ.' குடிநீர் இயந்திரம்

Print PDF

தினமணி              31.12.2013

மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு "ஆர்.ஓ.' குடிநீர் இயந்திரம்

சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் "ஆர். ஓ.' குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க மாநகராட்சியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு வரும் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சி சார்பில் இப்போது 86 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 93 குடும்ப நல மருத்துவமனைகளும், 12 அவசரகால பிரசவ மருத்துவமனைகளும் பராமரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் முன்னிலையில் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பல மருத்துவமனைகளில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உறவினர்களும் அவதியுறுகின்றனர். இதற்காக கேன் குடிநீர் வாங்கி மருத்துவமனைகளில் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் "ஆர்.ஓ.' குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது:

இப்போது மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் குடும்ப நல மருத்துவமனைகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இல்லை. இதனால் நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் அவதியுற்று வருகிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு, 86 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 93 குடும்ப நல மருத்துவமனைகளில் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படும். இதற்கான அறிவிப்பு அடுத்த நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளது.

இப்போது 12 அவசர கால பிரசவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்ளில் சிறிய அளவிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. இந்த மையங்களில் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து பெரிய இயந்திரங்கள் வழங்கப்படும்.

இவற்றுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் வெளியானவுடன் இயந்திரங்கள் கொள்முதல் செய்து நிறுவும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

கும்மிடிப்பூண்டியில் 63 நாய்களுக்கு கு.க.

Print PDF

தமிழ் முரசு             28.12.2013

கும்மிடிப்பூண்டியில் 63 நாய்களுக்கு கு.க.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 

 

 

 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்துசெல்லும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று பேரூராட்சி ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் பேரூராட்சியில் 3 வது வார்டில் துவங்கி 13 வார்டுகளில் தெருவில் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்தனர். இதில் 63 நாய்கள் பிடிபட்டது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிவேல் கூறுகையில், இங்கு பிடிக்கப்பட்டுள்ள நாய்களை மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். தடுப்பூசி போடப்பட்டு ஒரு வாரத்தில் மீண்டும் அதே இடத்தில் நாய்களை விட்டு விடுவோம் என்றார்.

 


Page 16 of 519