Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நாளை முதல் மாநகராட்சி முக்கிய பகுதியில் 24 மணி நேரமும் தனியார் மூலம் துப்புரவு பணி

Print PDF

தினகரன்             01.02.2014

நாளை முதல் மாநகராட்சி முக்கிய பகுதியில் 24 மணி நேரமும் தனியார் மூலம் துப்புரவு பணி

திருப்பூர், :மாநகராட்சியில் 2 மற்றும் 3வது மண்டலங்களுக்கு உட்பட்ட 16வது வார்டு முதல் 45வது வார்டு வரை உள்ள 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டுள்ளது. சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருப்பூரில் உள்ள 2 மண்டலங்களில் இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த 2 மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் சேகரமாகும் குப்¬ பகள் தினமும் 600 தள்ளுவண்டிகள் மூலம் சேகரிக்கப்படும்.இந்த ஒவ்வொரு குப்பை தொட்டிகளிலும் ரேடியோ அதிர்வின் அடையாள அட்டை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தொட்டிகளின் இருப்பிடம் மற்றும் பிற தகவல்கள் இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும். தெருக்க¬ ளயும், கழிவுநீர் கால்வாய்களையும் துப்புரவுபடுத்தும் பணியும் தினமும் நடக்கும். மேலும் சாலையோரங்களில் உள்ள புல் போன்ற செடிகள், மண் போன்றவை அவ்வப்போது அப்புறப்படுத்தப்படும்.

இந்த பணிக்காக அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் 781 துப்புரவு பணியாளர்களை தனியார் நிறுவனம் நியமித்து உள்ளது. இந்த பணியாளர்களுக்கு தேவை யான சீருடை பாதுகாப்பு சாதனங்கள் பணிக்கான கருவிகள் போன்றவற்றையும் அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

இந்த 30 வார்டுகளிலும் 3,200க்கும் மேற்பட்ட தெருக்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தெருக்களின் நிலையும் தினமும் இணையதளத்தில் கண்காணிக்க முடியும். இந்த பணிக்காக 26 நவீன வாகனங்களை இந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்த வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்.கருவி பொருத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். முக்கிய பகுதிகளான பஸ் நிலையங்கள், மார்க்கெட், மற்றும் பிரதான சாலைகளிலும் ஆட்டோக்கள் மூலம் 24 மணி நேரமும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.

இதுதவிர இந்த தனியார் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களின் வருகை பதிவேடுகளும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். பணியாளர்களின் வருகை பதிவுகள், வாகனங்களின் செயல்பாடுகள், குப்பை தொட்டிகளின் தகவல்கள் போன்ற அனைத்து தகவல்களும், இருந்த இடத்தில் இருந்தே இணையதளம் மூலம் 24 மணி நேரமும் மாநகராட்சி நிர்வாகத்தால் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுகாதாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தனியார் நிறுவனத்தினர் இலவச தொலை பேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுமக்கள் தெரிவிக்கு ம் புகார்களை அவர்கள், ஒரு மணி நேரத்தில் சரி செய்வார்கள். அவ்வாறு சரிசெய்யவில்லை எனில், தனியார் நிறுவனத்தினருக்கு அபராதம் விதிக்கப்படும். குப்பைகள் தனியாரிடம் ஒப்படைக்கும் விழா நாளை (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு 2வது மண்டலத்துக்கு உட்பட்ட எம்.எஸ்.நகரில் நடைபெறும்.

 

மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம்

Print PDF

தினமலர்                30.01.2014

மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில், 38 துவக்கப் பள்ளிகள், 24 நடுநிலைப் பள்ளிகள், உயர் மற்றும் மேநிலைப் பள்ளிகள் தலா ஒன்று என மொத்தம், 64 பள்ளிகள் உள்ளன. இதில், துவக்கப் பள்ளியில், 2,640 பேரும், நடுநிலைப் பள்ளிகளில், 4,816 பேரும், உயர்நிலைப் பள்ளியில், 208 பேரும், மேல்நிலைப் பள்ளியில், 282 பேரும் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அவசர காலத்திற்கு உதவும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் தீயணைப்பு கருவிகள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிகளில் உள்ள இடவசதிக்கு ஏற்ப பசுமைத் தளம் அமைக்கவும், சோலார் அமைப்பும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிடங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரிக்கும் நோக்கத்தோடு, கழிப்பிட பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், தளவாட பொருட்கள், நவீன கரும் பலகைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இது தவிர திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட, 5 வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. மாநகராட்சியின் கல்வி குழு கூட்டத்தில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளுக்கு இன்று, (30ம் தேதி) நடக்கும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளில் தரம் உயரும் என்ற நிலை உருவாகியுள்ளது.

 

சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் சுகாதாரப் பணிகள் மீண்டும் தனியார் வசம்

Print PDF

தினமணி             31.01.2014

சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் சுகாதாரப் பணிகள் மீண்டும் தனியார் வசம்

சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதை நிர்வாகம் மீண்டும் தனியார் வசம் ஒப்படைத்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் 3 ஆண்டுகள் சுவச்தா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வந்தது.

ஆனால், அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்தபோது, தனியார் நிறுவனம் சரிவர பணியாற்றவில்லை என்பதால் சுகாதாரப் பணிகளை இனி தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அப்போதைய மேயர் ரேகா பிரியதர்ஷிணி பதவி காலத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

இதற்கு மேயர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், திடீரென கடந்த 2010 ஜூலை மாதம், பெங்களூருவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பி. நிறுவனத்துக்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அரசு கொள்கைப்படி மாநகராட்சிகளில் 3-இல் ஒரு பங்கு வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு தனியார் வசம் வழங்க வேண்டும் என்று அப்போதைய நிர்வாகம் விளக்கம் அளித்தது.

ஆனால், எஸ்.ஆர்.பி. நிறுவனம் உறுதி அளித்த அளவு பணியாளர்களையோ, வாகனங்களையோ அந்த நிறுவனம் பணியில் ஈடுபடுத்தவில்லை என்றும் ஊழியர்களுக்கு குறைந்த கூலியே வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், எஸ்.செüண்டப்பன் தலைமையில் அதிமுக அரசு பதவிக்கு வந்ததும் ஒப்பந்தக்காலம் முடிவடையும் முன்னரே கடந்த 29.10.12 அன்று எஸ்.ஆர்.பி. நிறுவனத்தின் ஒப்பந்தம் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், 1.11.12 முதல் சுய உதவிக் குழுக்களைப் பணியமர்த்தியும், வாகனங்களை தனியாரிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அடுத்த 3 வாரங்களிலேயே சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட உத்தரவும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை சென்னையைச் சேர்ந்த சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்துக்கு அளித்து மாநகராட்சி வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த நிறுவனம் அள்ளும் குப்பைகளுக்கு டன்னுக்கு 1,448 ரூபாயை மாநகராட்சி வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநகரில் உள்ள 2, 7, 12 முதல் 19, 23 முதல் 27, 29 முதல் 33, 45 ஆகிய 21 வார்டுகளில் தனியார் நிறுவனம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

 


Page 9 of 519