Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

15 நாள்களுக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்

Print PDF

தினமணி 20.08.2009

15 நாள்களுக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்

கடலூர், ஆக. 19: கடலூரில் பன்றிகளை ஒழிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் நகராட்சியில் புதன்கிழமை நடந்தது.

கூட்டத்தில் நகராட்சித் தலைவர் பேசியது:

பன்றிக் காய்ச்சல் நோய் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நகராட்சி ஊழியர்கள் மிகுந்த கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

நகரில் நடமாடும் பன்றிகளுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் சம்பந்தம் இல்லை.

எனினும் ஏனைய சுகாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு, பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாய்கள், பன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்களை அழிக்கக் கூடாது என்பது, அரசின் கொள்கை.

எனவே பன்றிகளை சுடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை.

எனவே நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் மீஞ்சிப் போகும் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றே பன்றிகளை வளர்க்கிறார்கள்.

எனவே மீஞ்சி போகும் உணவுப் பொருள்களை நகராட்சியே அப்புறப்படுத்தி, உரச் சேமிக்கும் கிடங்குக்கு அனுப்பி வைக்க நகராட்சி திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பன்றி வளர்ப்பு குறைய வாய்ப்புள்ளது என்றார் தங்கராசு.

ஆணையர் குமார் பேசுகையில், பன்றிகள் மற்றும் தண்ணீர் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவாது, மனிதர்கள் மூலமே பரவும் என்பதை, நகராட்சி ஊழியர்களும் உறுப்பினர்களும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

எனினும் 15 நாள்களுக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும். பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

வைரல் காய்ச்சல் என்று யாரும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

நகராட்சி ஊழியர்கள் இது குறித்து வீடுவீடாகச் சென்று பார்த்து, நகராட்சிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் துணைத் தலைவர் தாமரைச் செல்வன், நகர் நல அலுவலர் லட்சுமி நாராயணன் நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 20 August 2009 08:20
 

டாக்டர் ஆலோசனை பெறாமல் மாத்திரை சாப்பிடக்கூடாது: 3 வகையான பன்றிக் காய்ச்சல்

Print PDF

மாலை மலர் 19.08.2009

டாக்டர் ஆலோசனை பெறாமல் மாத்திரை சாப்பிடக்கூடாது: 3 வகையான பன்றிக் காய்ச்சல்

தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள், தரவேண்டிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* முதல் வகை பன்றிக்காய்ச்சலில், நோயாளிகளுக்கு சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும். இவர்களுக்கு உடம்பு வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

* இந்த நோயாளிகளுக்கு டாமிபுளு மருந்து தேவையில்லை. 2 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

* எச்-1 என்-1 ஆய்வக பரிசோதனை தேவையில்லை.

* இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ள வேண்டும்.

* இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளை பயன்படுத்திட வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.

2-வது வகை நோயாளிகளுக்கு வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும்.

வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் உள்ள நபர் 5 வயது வயதுக்குள் உள்ள குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப்பரிசோதனை தேவையில்லை.

* வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

3-வது வகை நோயாளிகளுக்கு வகை 1 மற்றும் வகை 2-க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளை பொறுத்தவரை உணவு அருந்ததாத நிலை ஆகிய சூழ்நிலை ஏற்படும்.

* எச் 1 என் 1 ஆய்வகப்பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்.

* மருத்துவமனையில் உள்நோயாளியாக அனு மதிக்கப்பட வேண்டும்.

* டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

* எனவே சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் அனைவரும் எச் 1 என் 1 ஆய்வு செய்திட வேண்டிய அவசியம் இல்லை.

* மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

* தேவையற்ற நிலையில் டாமிபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருத்தல் நல்லது.

 

சிதம்பரம் நகராட்சி சார்பில் தூர்வாரும் பணி

Print PDF

தினமலர் 19.08.2009

 


Page 501 of 519