நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள்
Friday, 12 September 2014 05:57
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 12.09.2014
நவீன நகரங்களில் வை-ஃபை, தொலை மருத்துவ வசதிகள்மத்திய அரசு உருவாக்கவுள்ள 100 நவீன நகரங்களில் (ஸ்மார்ட் சிட்டி) 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், வை-ஃபை எனப்படும் கம்பியில்லா இணைய சேவை, தொலைவிலிருந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் "டெலிமெடிசன்' வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும் என்று நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவீன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை வடிவமைத்து வரும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அதற்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
அதில், சிறந்த போக்குவரத்து வசதி, அனைத்து வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு வசதி, வீடுகளுக்கே சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நவீன நகரங்களின் கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்கள், மாநில முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நவீன நகரங்களுக்கான வரைவுத் திட்டம் இறுதி செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
|
செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்
Monday, 01 September 2014 09:33
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 01.09.2014 செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்
பாஜக தலைமையிலான 3 தில்லி மாநகராட்சிகளிலும் இம்மாதம் 6 முதல் 20ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மை இயக்கம் நடைபெறும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவரும், தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவருமான சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தத் தூய்மை இயக்கத்தின்போது காலி இடங்கள், ரயில்வே இருப்புப்பாதை அருகில் உள்ள பகுதிகள், வழக்கமாக குப்பை கொட்டப்படும் தெரு முனைகள் ஆகியவை பராமரிக்கப்படும்.
மாநகராட்சிகளின் துப்புரவு ஆய்வாளர்கள், முதன்மைப் பொறியாளர்கள், மண்டல துணை ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூய்மைப் பணிகளை ஆய்வு மேற்கொள்வர். குறிப்பாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2 காலனி குடியிருப்புகள் தூய்மைப்படுத்தப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள்.
மாநகராட்சிகளின் மேயர்கள், நிலைக் குழுத் தலைவர்கள, ஆணையர்கள் ஆகியோர் இந்தத் தூய்மை இயக்கத்தின்போது திடீர் ஆய்வு மேற்கொள்வர். மேலும், தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி உறுப்பினர்கள், மண்டலத் தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார்கள். தூய்மை இயக்கத்தைத் தொடர்ந்து, இம்மாதம் 25 முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2 வரை தூய்மை மற்றும் சுகாதார வாரம் கடைப்பிடிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி அறுக்கும் கூடங்களை கண்காணிக்க குழு! நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குனர் உத்தரவு
Tuesday, 19 August 2014 06:13
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 19.08.2014
இறைச்சி அறுக்கும் கூடங்களை கண்காணிக்க குழு! நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குனர் உத்தரவு
பதிவு செய்த நாள்
கடலூர் : இறைச்சி அறுக்கும் கூடங்களில் சுகாதாரம் மற்றும் பிராணிகள்
வதைக்கப்படுவதைத் தவிர்த்திட நகராட்சி அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க
நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி,
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் தனியாக இயங்கி
வருகிறது. இங்கு அறுக்கப்படும் கால்நடைகள், சுகாதாரத்துறை ஆய்வாளரின்
ஆய்விற்கு பிறகே அறுத்து முத்திரையிட்டு கறி விற்பனை செய்ய வேண்டும். பல
ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இத்திட்டம் காலப்போக்கில்
கைவிடப்பட்டது.இதனால், ஆடு, மாடுகள் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும்
சுகாதாரமற்ற இடங்களில் அறுக்கப்பட்டு அதே பகுதியில் விற்பனை
செய்யப்படுகிறது.பல நேரங்களில், இறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை
அறுத்து கறியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உண்போர் பல்வேறு
நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இவை அனைத்திற்கும் மேலாக, இறைச்சிக்காக
கொண்டுவரப்படும் கால்நடைகள் சுகாதாரமற்ற இடங்களில் அடைத்து வைத்து
கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறது.இதனை தவிர்த்திடவும், கால்நடைகளை
சுகாதாரமான இடங்களில் அறுத்திடவும், இறைச்சிக்குக் கொண்டு வரப்படும்
கால்நடைகள் வதைப்பதை முறைப்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல
வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி
மற்றும் நகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்களில் 50 முதல் 100 கால்நடைகளை
அறுத்திட 2,400 சதுர அடி இடம், 101 முதல் 200 கால்நடைகளுக்கு 4,800 சதுர
அடி, 201 முதல் 400 கால்நடைகளுக்கு 9 கிரவுண்ட், 401 முதல் 600
கால்நடைகளுக்கு ஒரு ஏக்கர், 600க்கு மேற்பட்ட கால்நடைகள் அறுத்திட 2
ஏக்கர் பரப்பளவு இட வசதி இருக்க வேண்டும்.மேலும், அறுவைக் கூடம் மற்றும்
இறைச்சி விற்பனைக் கூடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் பராமரித்திட
வேண்டும். இதனைக் கண்காணித்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக்
குழு அமைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில், மத்திய அரசின் சுற்றுச்சூழல்
மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் தலைமைச்
செயலர் தலைமையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை
பராமரிப்புத் துறை, சுகாதாரம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 21 துறை
அதிகாரிகளை கொண்டு மாநில அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை உள்ளார்.
இக்குழு
கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி மற்றும் கடந்த ஜூன் 17ம் தேதிகளில் கூடி,
மாவட்ட அளவிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி அளவில் அந்தந்த பகுதி
அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைத்து இறைச்சிக் கூடங்களை
கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில், மாவட்ட
அளவில் கலெக்டர் தலைமையிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆணையர்கள்
தலைமையில் குழு அமைத்து, இறைச்சிக் கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை
கண்காணித்து மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல்
செய்திட, நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகளிலும் விரைவில் கண்காணிப்புக்
குழு அமைக்கப்பட உள்ளது.
|
|
|
|
Page 5 of 519 |