Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

அனைத்து குடிசைப் பகுதிகளிலும் கழிப்பறை வசதி

Print PDF

தினமணி      01.09.2014

அனைத்து குடிசைப் பகுதிகளிலும் கழிப்பறை வசதி

தில்லியின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் சுகாதாரம், கழிப்பறை வசதிகள் உருவாக்கப்படும் என்று தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டி.யு.எஸ்.ஐ.பி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அமர்நாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடிசைப் பகுதிகளில் உள்ள பழைய கழிப்பறைகளுக்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கழிப்பறைகளை நிகழாண்டில் ரூ.42 கோடி செலவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தில்லியில் உள்ள 685 குடிசைப் பகுதிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கழிப்பறை வசதியற்ற குடிசைப் பகுதிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, இடப் பற்றாக்குறையுள்ள 53 குடிசைப் பகுதிகளில் 67 நடமாடும் கழிப்பறைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கழிப்பறைகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை தொண்டு நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு, தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தில்லி பிரதேச பட்ஜெட்டின்போது, "தலைநகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் கழிப்பறை, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்' என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 01 September 2014 09:31
 

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயசந்திரா

Print PDF

தினமணி             12.02.2014

வீட்டு வசதி திட்டங்களுக்கு  ரூ. 890 கோடி ஒதுக்கீடு:  அமைச்சர் ஜெயசந்திரா

கர்நாடக வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.

பெங்களூரு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடம் செவ்வாய்க்கிழமை குறைகளை கேட்டறிந்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகûளை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. 

முந்தைய பாஜக அரசு, வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு அதற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகிறது.

தேசிய அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டாலும், வருவாய் பெருக்குவதில் கர்நாடக அரசு பின்தங்கவில்லை. 

விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு முந்தைய பாஜக அரசு ரூ. 900 கோடி ஒதுக்கியது. மீதமுள்ள ரூ. 3 ஆயிரம் கோடியை காங்கிரஸ் அரசு ஒதுக்கியது. 

வீட்டு வசதி திட்டங்களுக்கு ரூ. 890 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாஜக அரசு, பொதுப் பணித் துறையில் வைத்திருந்த ரூ. 280 கோடி பாக்கியை எங்கள் அரசு அளித்துள்ளது.
 தும்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்க அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால், யாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதா மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதா தொடர்பாக குறித்து அரசு இன்னும் யோசிக்கவில்லை. 

மகாராஷ்டிரத்தில் அமல்படுத்தியுள்ள மூடநம்பிக்கை தடை சட்ட மசோதாவை தொடர்பான சாதக, பாதகங்களை ஆராய்ந்து, நம்பிக்கை, மதம், மனித உரிமை ஆகியவற்றுக்கு பாதகமில்லாமல் புதிய சட்டத்தை உருவாக்கப்படும் என்றார் அவர்.

 

குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 8 கோடி

Print PDF

தினமணி          27.01.2014 

குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 8 கோடி

சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்களின் சுகாதார பணிகளுக்காக மாநகராட்சியின் நிதி ரூ. 8.36 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 195 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்கள் உள்ளன.

இவற்றில் 156-க்கு மேற்பட்ட குடியிருப்புகளின் பின்புறம் கான்கிரீட் சாலை அமைத்தல், கழிவுநீர் குழாய்களை பழுதுபார்த்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ. 20 கோடி தேவைப்படும் என்று குடிசை மாற்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்கட்டமாக ரூ.1.87 கோடிக்கான காசோலையை மேயர் மற்றும் ஆணையர் கடந்த 6-ஆம் தேதி வழங்கினர்.

தற்போது மீண்டும் ரூ.8.36 கோடிக்கான காசோலையை மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் குடிசைமாற்று வாரிய தலைமைப் பொறியாளர் ஆர். ஜெயபாலிடம் சனிக்கிழமை வழங்கினர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 3 of 69