Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

உள்ளாட்சிகள் அதிகாரம் வீட்டு வாரியத்துக்கு மாற்றம்

Print PDF

தினமலர்     07.04.2017

உள்ளாட்சிகள் அதிகாரம் வீட்டு வாரியத்துக்கு மாற்றம்

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, சென்னை நொளம்பூர் புறநகர் திட்டத்தில், 84 வீடுகள்; அரியலுார் மாவட்டம், கரும்பஞ்சாவடியில், 171 வீடுகள்; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 10 வீடுகள்.காஞ்சிபுரம் புறநகர் திட்டத்தில், 141 வீடுகள் உட்பட, சில திட்டங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களை, நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம், திட்டங்களுக்கான அனுமதி விண்ணப்பம் பெறுவது, ஒப்புதல் அளிப்பது, கட்டு மான பணியை நெறிப்படுத்துவது, சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புகள் வழங்குவது, மின் இணைப்பு வழங்குவது போன்ற அதிகாரங்கள், சம்பந்தப்பட்ட பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன.திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், நிர்வாக வசதிக்காகவும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்த அதிகாரங்களை, வீட்டுவசதி வாரியத்துக்கு கூடுதலாக வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.

அதிருப்தி : திருவள்ளூர் மாவட் டம், திருமழிசை துணை நகர திட்டத்தை தொடர்ந்து தற்போது, ஐந்து குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் வீட்டுவசதி வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை, வீட்டுவசதி வாரியம் கைப்பற்றுவது, உள்ளாட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 

தில்லி இரவுக் குடில்களின் கழிப்பறை விவரம்:அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

Print PDF
தினமணி      19.09.2014

தில்லி இரவுக் குடில்களின் கழிப்பறை விவரம்:அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தில்லியில் உள்ள இரவு நேரக் குடில்களுக்கான கழிப்பறைகளின் விவரங்கள் குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு தில்லி பிரதேச அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் உள்ள இரவு நேரக் குடில்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறி "ஷரி அதிகார் மஞ்ச் பகரோங்கே லியே' எனும் தன்னார் தொண்டு நிறுவனம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், "தில்லியில் வீடில்லாத மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரவுநேரக் குடில்களுக்கான நடமாடும் கழிப்பறைகள் பலவும் செயல்படவில்லை. இதனால், இரவுக் குடில்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று, போதைக்கு அடிமையானோருக்கான சிகிச்சை மையங்கள் எண்ணிக்கை விஷயத்திலும் தவறான தகவல்களை தில்லி அரசு அளித்துள்ளது. 32 போதை சிகிச்சை மையங்களில் போதை மருந்து சிகிச்சைக்கான தேசிய மையம் (எய்ம்ஸ்), போதை சிகிச்சை மருந்தகம் (ஜிபி பந்த் மருத்துவமனை), தில்ஷாத் ஹார்டனில் உள்ள ஐ.எச்.பி.ஏ.எஸ். ஆகியவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. போதை சிகிச்சை மையங்கள் என்ற பெயரில் பல இருந்தாலும் அவற்றில் அதற்கான உரிய வசதிகள் ஏதும் இல்லை' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். எண்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு:

தில்லியில் உள்ள இரவுநேரக் குடில்களுக்காக நிரந்தர, தாற்காலிக கழிப்பறைகள் எத்தனை உள்ளன. அவற்றில் எத்தனை சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவர அறிக்கையை தில்லி நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் (டியுஎஸ்ஐபி) வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதேபோன்று, அனைத்து போதை சிகிச்சை மையங்களும் செயல்படுவதை உறுதிப்படுத்த தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

மாநகரில் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டம்

Print PDF

தினகரன்       08.09.2014

மாநகரில் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டம்

கோவை, : கோவையில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின்படி இந்த ஆண்டிற்குள் 3,094 அடுக்குமாடி குடியிருப்புகள் முடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவுசெய்துள்ளது.

 சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின்படி குடிசை பகுதி வாழ் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரையில் 44,870 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கோவையில் உக்கடம், அம்மன் குளம் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்ப ட்டு வருகிறது. இதில், உக் கடம் பகுதி ஒன்றில் ரூ.118.48 கோடியில் 2,232 அடுக்குமாடி குடியிருப்புகள், உக்கடம் பகுதி 2ல் ரூ.33.96 கோடியில்  816 அடுக்குமாடி குடியிருப்புகள், அம்மன் குளம் பகுதியில் ரூ.23.44 கோடியில் 792 வீடுகள் மற்றும் உக்கடம் பகுதி 3ல் ரூ.435.43 கோடியில் 9,600 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.611.31 கோடியில் 13 ஆயிரத்து 440 குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், தற்போது 2,632 குடியிருப்புகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டிற்குள் 3,904 குடியிருப்புகளை முடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பணிகளை முடித்து உடனடியாக 6,904 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 


Page 2 of 69