Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.38 கோடியில் குடியிருப்பு, அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

Print PDF

தி இந்து       14.05.2017

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.38 கோடியில் குடியிருப்பு, அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.38 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கோவை மாவட்டம் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் ரூ.10 கோடியே 69 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகள், சுகுணாபுரம் திட்டப் பகுதியில் ரூ. 4 கோடியே 33 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்தார்.

இதுதவிர, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சின்னாம்பாளையம் கிராமத்தில் ரூ.11 கோடியே 77 லட்சத்தில் 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள், கோவையில் ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய கோட்ட அலுவலகம், சென்னை மாதவரம் ஜம்புலி காலனியில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் மூலம் ரூ. 6 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

திருச்சியில் நகர ஊரமைப்புத் துறை சார்பில் ரூ.1.56 கோடியில் மண்டல உதவி இயக்குநர் அலுவலகம், உள்ளூர் திட்டக் குழும அலுவலக கட்டிடம், திருநெல்வேலியில் ரூ.1.93 கோடியில் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், உள்ளூர் திட்டக் குழு அலுவலகம் என மொத்தம் ரூ.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

புதிய மென்பொருள்

கட்டிட வரைபடம், மனைப் பிரிவு வரைபடம், நிலப்பயன் மாற்றம் குறித்த உத்தேசங்களுக்கு கணினி மூலம் ஒப்புதல் வழங்கு வதற்காக ரூ. 2 கோடியே 60 லட்சத் தில் தயாரிக்கப்பட்டுள்ள மென் பொருளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த புதிய மென் பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ள தால் www.tn.govt.in/tcp என்ற இணையதளத்தின் மூலம் கட் டிடங்களுக்கு அனுமதி பெற விண் ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள் வதுடன், திட்ட அனுமதி ஆணை, ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபட நகல்களையும் இந்த இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி      14.05.2017

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் குறிஞ்சி நகர் திட்டப்பகுதியில் ரூ.10 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சுகுணாபுரம் திட்டப்பகுதியில் ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகள் என 224 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

திருமண மண்டபம்

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சின்னாம்பாளையம் கிராமத்தில் பொள்ளாச்சி–உடுமலைப்பேட்டை பிரதான சாலையில் சிதிலமடைந்த 72 குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக அதே இடத்தில் ரூ.11 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்; கோயம்புத்தூரில் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சரக மற்றும் கோட்ட அலுவலக வளாகம்; சென்னை மாதவரம் ஜம்புலி காலனியில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்;

நகர் ஊரமைப்புத்துறையின் சார்பில் திருச்சியில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும அலுவலக கட்டிடம்; திருநெல்வேலியில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும அலுவலக கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மொத்தம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

கட்டிட வரைபடம், மனைப்பிரிவு வரைபடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் குறித்த உத்தேசங்களுக்கு கணினி வாயிலாக ஒப்புதல் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த புதிய மென்பொருளால், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு சமர்ப்பிக்கும் போது கணினியால் வழங்கப்படும் தனித்த எண்ணைக்கொண்டு மனுதாரர் தனது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்குவதன் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். ஒப்புதல் கோரும் அனைத்து விதமான விண்ணப்பங்களை நகர் ஊரமைப்பு துறையின் எந்த ஒரு சார்நிலை அலுவலகத்திற்கும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கவும், இட நேராய்வு செய்யவும், திட்ட அனுமதி ஆணை மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபட நகல்களை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி ஆணை

மேலும், விண்ணப்பம் இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்டதற்கு ஒப்பளிப்பு வழங்குதல், இட நேராய்வு தேதி குறித்த விவரம் தெரிவித்தல், கூடுதல் விவரங்கள் கோருதல், மனுதாரர் விரும்பினால் அலுவலர்களை சந்தித்து விளக்கம் தெரிவிக்க வாய்ப்பு வழங்குதல், கட்டணங்கள் செலுத்த கோரும் கடிதம் அனுப்புதல் மற்றும் திட்ட அனுமதி ஆணை வழங்குதல் ஆகியவற்றை குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் மூலம் (இ–மெயில்) மனுதாரருக்கு தெரிவிக்க உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ஜீவா நகர் மக்களுக்கு விரைவில் மாற்று வீடுகள்... குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பரிந்துரை

Print PDF

தினமலர்      04.05.2017

ஜீவா நகர் மக்களுக்கு விரைவில் மாற்று வீடுகள்... குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பரிந்துரை

கவுண்டம்பாளையம் ஜீவா நகரில், வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, பாதை அமைக்க வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்காக, அங்குள்ள 203 குடும்பங்களுக்கு, மாற்று வீடுகளை ஒதுக்கீடு செய்யுமாறு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது, ஜீவா நகர். கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தாக இருந்தபோது, வண்டிப்பாதையாக இருந்த இடத்தை ஆக்கிரமித்து, 203 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதே பகுதியிலுள்ள புனித தாமஸ் பள்ளி, சட்டரீதியாக போராடியது. ஆனால், மாவட்ட நிர்வாகம், இதை குடிசைப் பகுதியாக அறிவித்து, வண்டிப்பாதையை 'புறம்போக்கு' நிலம் என வகைப்படுத்தியது.

முதல் தீர்ப்பு!பள்ளி சார்பில் தாக்கல் செய்த மனுவை (எண்:7769/2000) விசாரித்த ஐகோர்ட், 'ஆக்கிரமிப்புகளை ஐந்து மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்' என்று, 2003 மார்ச் 4ல் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட், முந்தைய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்புகள் கொடுத்து, ஆட்சேபங்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு' 2008 நவ.,17ல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம் மனுப்போர் நடத்தியது; அதன் விளைவாக, 2011 ஜன.,18ல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, ஜீவா நகர் குடிசைவாசிகளுக்கு 7 (1) நோட்டீஸ் தரப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தும் முன், தேர்தல் வந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2012 ஜூன் 19ல், அன்றிருந்த கலெக்டர் கருணாகரன், செயல்முறை ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.

கலெக்டர் உத்தரவு ரத்து!ஐகோர்ட் உத்தரவு, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கோரிக்கை எதையும் ஏற்காத அவர், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பின்பே, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகள் இழுத்த வழக்கில், கடந்த ஜன.,19 அன்று, ஐகோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், முக்கிய தீர்ப்பை வழங்கியது.

கலெக்டர் கருணாகரனின் செயல்முறை ஆணையை ரத்து செய்த ஐகோர்ட், 'ஜீவா நகரில் வசிப்போர்க்கு, மாற்று இடங்களை வழங்கி, ஒரு கி.மீ., துாரத்துக்கு இருக்கும் ஆக்கிரமிப்புகளை, ஆறு மாதங்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, உடனடியாக, நிறைவேற்றக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அங்கு வசிக்கும் 203 குடும்பங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

தற்போது, அந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை, ஒதுக்கீடு செய்து தருமாறு, குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் பரிந்துரைத்து, பட்டியலையும் அனுப்பியுள்ளார். மாநகராட்சி பரிந்துரையை ஏற்று, இவர்களுக்கு மாற்று வீடுகளை, குடிசை மாற்று வாரியம் விரைவில் ஒதுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடுகளிடையே இணைப்புச்சாலை அமைப்பதற்கான சாத்தியம் உருவாகும்.

வீடுகள் ஒதுக்குவதில் பிரச்னையில்லை!ஜீவா நகர் மக்களுக்கு, மாற்று வீடுகள் ஒதுக்குவது தொடர்பாக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ''ஐகோர்ட் உத்தரவின்படி, மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது; சட்டரீதியாக எந்த தடையுத்தரவும் இல்லாதபட்சத்தில், பட்டியலில் உள்ள, 203 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.

கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இதில் தடையுத்தரவு எதுவும் இனி வர வாய்ப்பில்லை; ஏனெனில், தீர்ப்பு ஜன.,19ல் வெளியானது; ஜன.,25ல் அவர்களுடைய கையில் கிடைத்துள்ளது. அதிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து, தடை பெற்றிருக்கலாம்; ஆனால், ஏப்., 25 உடன் அதற்கான அவகாசம் முடிந்து விட்டதால், இனி தடை வாங்க வாய்ப்பில்லை' என்றனர்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 69