தினமணி 22.12.2009
மாதாந்திர சம்பளதாரரின் வரிச்சுமை: மத்திய அரசு அறிவிப்பு
புது தில்லி, டிச. 21: மாத சம்பளம் பெறுவோரின் வரிச்சுமை இனி கூடுதலாகும். இதற்கான மத்திய அரசின் அறிவிக்கை திங்கள்கிழமை வெளியானது. ஏப்ரல் 1, 2009-தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டிலேயே இந்த சுமையை வரி செலுத்துவோர் ஏற்க வேண்டியிருக்கும்.
மாத சம்பளம் பெறுவோர், சம்பளம் தவிர கூடுதலாக பெறும் வீட்டு வாடகைப் படி, மருத்துவச் செலவை திரும்பப் பெறுதல், போக்குவரத்துப் படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இனி இவை அனைத்தும் வரி செலுத்தும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இனங்களில் இனி வரிச் சலுகை பெற முடியாது.
இதர படிகளுக்கான வரி (எப்பிடி) ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.